search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    திருப்பூரில் மூதாட்டியிடம் 5 பவுன் நகை பறிப்பு
    X

    திருப்பூரில் மூதாட்டியிடம் 5 பவுன் நகை பறிப்பு

    திருப்பூரில் பேரனுடன் மோட்டார் சைக்கிளில் சென்ற மூதாட்டியிடம் 5 பவுன் நகையை வாலிபர் ஒருவர் பறித்து சென்றார்.

    திருப்பூர்:

    திருப்பூர் நெருப்பெரிச்சல் பகுதியை சேர்ந்தவர் சுருளியம்மாள் (வயது 65). இவர் பெரியதோட்டம் என்ற பகுதியில் உள்ள தனது மகனை பார்க்க சென்றார். அங்கு மகன் குடும்பத்தினருடன் பேசி விட்டு இரவு பேரனுடன் மோட்டார் சைக்கிளில் வீட்டுக்கு புறப்பட்டார்.

    நல்லூத்துபாளையம் என்ற இடத்தில் வந்தபோது பின்னால் ஒரு வாலிபர் மோட்டார் சைக்கிளில் வந்தார். இருட்டுநேரத்தை பயன்படுத்திய அந்த வாலிபர் அருகில் வந்து சுருளியம்மாள் கழுத்தில் அணிந்திருந்த 5 பவுன் நகையை பறித்தார்.

    அதிர்ச்சியடைந்த மூதாட்டி சத்தம்போட்டார். உடனே பேரன் மோட்டார் சைக்கிளை நிறுத்தினார். கொள்ளையனை தேடிய போது அவர் இருட்டில் மின்னல் வேகத்தில் தப்பினார்.

    இது குறித்து அனுப்பர் பாளையம் போலீசில் புகார் செய்தனர். போலீசார் வழக்குப்பதிவு செய்து கொள்ளையனை தேடி வருகிறார்கள்.

    Next Story
    ×