search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    காரைக்குடி அருகே பூட்டியிருந்த வீட்டில் நகை- வெள்ளிப்பொருட்கள் கொள்ளை
    X

    காரைக்குடி அருகே பூட்டியிருந்த வீட்டில் நகை- வெள்ளிப்பொருட்கள் கொள்ளை

    காரைக்குடி அருகே பூட்டியிருந்த வீட்டின் ஜன்னலை உடைத்து நகை மற்றும் வெள்ளிப்பொருட்களை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றனர்.

    காரைக்குடி:

    காரைக்குடி அருகே உள்ள ஆத்தங்குடி பகுதியைச்சேர்ந்தவர் காந்தி (வயது 65). இவர் சில நாட்களுக்கு முன்பு வீட்டில் பணியாட்களை வைத்து மராமத்து பணிகளை மேற் கொண்டார். சம்பவத்தன்று வீட்டை பூட்டிவிட்டு வெளியே சென்று விட்டார்.

    இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி கொண்ட மர்ம நபர்கள் வீட்டின் ஜன்னலை உடைத்து உள்ளே புகுந்தனர்.

    பின்னர் பீரோவை திறந்து அதில் இருந்த 2 பவுன் நகை, 5 கிலோ வெள்ளி பொருட்களை திருடிக்கொண்டு தப்பினர். வீடு திரும்பிய காந்தி நகை- வெள்ளி பொருட்கள் திருட்டு போயிருப்பது கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

    இதுகுறித்த புகாரின் பேரில் குன்றக்குடி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சரவணபோஸ் வழக்குப்பதிவு செய்து கொள்ளையர்களை தேடி வருகிறார்.

    இதேபோல் காரைக்குடி முடியரசன் சாலையை சேர்ந்தவர் குமாரவேல் (41). இவர் சம்பவத்தன்று தனது மனைவியுடன் மோட்டார் சைக்கிளில் வெளியே புறப்பட்டார். திருச்சி ரோட்டில் உள்ள ஹவுசிங்போர்டு பகுதியில் வந்தபோது ஒரே மோட்டார் சைக்கிளில் பின் தொடர்ந்து வந்த 3 பேர் திடீரென்று குமாரவேல் ஓட்டிவந்த சைக்கிளை எட்டி உதைத்தனர். இதில் நிலைதடுமாறிய அவர் தனது மனைவியுடன் கீழே விழுந்தார்.

    பின்னர் அந்த கும்பல் 2 பேரையும் சரமாரியாக தாக்கிவிட்டு குமாரவேல் மனைவி அணிந்திருந்த 2½ பவுன் நகையை பறித்துக் கொண்டு தப்பியது. இந்த தாக்குதலில் கணவன்- மனைவி இருவரும் படுகாயம் அடைந்தனர்.

    இதுகுறித்த புகாரின் பேரில் குன்றக்குடி போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆத்மநாதன் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றார்.

    Next Story
    ×