என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
தி.மு.க. தலைவர் கருணாநிதி மறைவு: நாமக்கல்லில் மேலும் 2 தொண்டர்கள் உயிரிழப்பு
Byமாலை மலர்10 Aug 2018 9:01 AM GMT (Updated: 10 Aug 2018 9:01 AM GMT)
நாமக்கல் கிழக்கு மாவட்டத்தில் தி.மு.க. தலைவர் கருணாநிதி மறைந்த செய்தி கேட்டு தி.மு.க. தொண்டர்கள் இரண்டு பேர் மரணம் அடைந்தனர். #karunanidhideath #dmk
நாமக்கல்:
நாமக்கல் கிழக்கு மாவட்டம் வெண்ணந்தூர் ஒன்றியம் அலவாய்ப்பட்டி ஊராட்சியைச் சேர்ந்த கணபதி (87) நெசவுத் தொழிலாளி. முன்னாள் ராசிபுரம் வட்ட துணைச் செயலாளர், முன்னாள் வெண்ணந்தூர் ஒன்றிய அவைத்தலைவர், அலவாய்பட்டி கிளை முன்னாள் செயலாளர் என பல பதவிகளை வகித்துள்ளார்.
இவர் கடந்த சில நாட்களாக கழக தலைவர் கருணாநிதி உடல்நிலை குறித்த தகவல்களை தொலைகாட்சியில் பார்த்து, ஆழ்ந்த வருத்தத்துடன் இருந்து வந்தார். இந்நிலையில் தி.மு.க. தலைவர் கருணாநிதி உடல் அடக்கத்திற்குப் பிறகு தொடர்ந்து தொலைக்காட்சியில் கருணாநிதி மரணம் குறித்த நிகழ்வுகளைப் பார்த்துக் கொண்டிருந்துள்ளார். இந்த நிலையில் திடீரென மாரடைப்பால் இறந்தார். அவருக்கு மாரியம்மாள் என்ற மனைவியும், இரண்டு மகன்களும், ஒரு மகளும் உள்ளனர்.
இதே போல் ராசிபுரம் ஒன்றியம் மலையாம்பட்டி ஊராட்சியைச் சேர்ந்தவர் பெருமாயி அம்மாள் (53) விவசாயி தொழிலாளியான இவர் கருணாநிதி உடலைப் பார்த்துக் கொண்டிருந்த பெருமாயி அம்மாள் அதிர்ச்சியில் மாரடைப்பால் மரணமடைந்தார். இவரது கணவர் பெயர் பெரியசாமி. ஒரு மகன் மற்றும் ஒரு மகள் உள்ளார்கள்.
கருணாநிதியின் மறைவை அறிந்து அதிர்ச்சியில் மரணமடைந்து அவர்கள் பிரிவால் வாடும் திமுக தொண்டர்களை மாவட்ட, ஒன்றிய, நகர, பேரூர் கழக நிர்வாகிகள் பலரும் ஆறுதல் கூறினர். #karunanidhideath #dmk
நாமக்கல் கிழக்கு மாவட்டம் வெண்ணந்தூர் ஒன்றியம் அலவாய்ப்பட்டி ஊராட்சியைச் சேர்ந்த கணபதி (87) நெசவுத் தொழிலாளி. முன்னாள் ராசிபுரம் வட்ட துணைச் செயலாளர், முன்னாள் வெண்ணந்தூர் ஒன்றிய அவைத்தலைவர், அலவாய்பட்டி கிளை முன்னாள் செயலாளர் என பல பதவிகளை வகித்துள்ளார்.
இவர் கடந்த சில நாட்களாக கழக தலைவர் கருணாநிதி உடல்நிலை குறித்த தகவல்களை தொலைகாட்சியில் பார்த்து, ஆழ்ந்த வருத்தத்துடன் இருந்து வந்தார். இந்நிலையில் தி.மு.க. தலைவர் கருணாநிதி உடல் அடக்கத்திற்குப் பிறகு தொடர்ந்து தொலைக்காட்சியில் கருணாநிதி மரணம் குறித்த நிகழ்வுகளைப் பார்த்துக் கொண்டிருந்துள்ளார். இந்த நிலையில் திடீரென மாரடைப்பால் இறந்தார். அவருக்கு மாரியம்மாள் என்ற மனைவியும், இரண்டு மகன்களும், ஒரு மகளும் உள்ளனர்.
இதே போல் ராசிபுரம் ஒன்றியம் மலையாம்பட்டி ஊராட்சியைச் சேர்ந்தவர் பெருமாயி அம்மாள் (53) விவசாயி தொழிலாளியான இவர் கருணாநிதி உடலைப் பார்த்துக் கொண்டிருந்த பெருமாயி அம்மாள் அதிர்ச்சியில் மாரடைப்பால் மரணமடைந்தார். இவரது கணவர் பெயர் பெரியசாமி. ஒரு மகன் மற்றும் ஒரு மகள் உள்ளார்கள்.
கருணாநிதியின் மறைவை அறிந்து அதிர்ச்சியில் மரணமடைந்து அவர்கள் பிரிவால் வாடும் திமுக தொண்டர்களை மாவட்ட, ஒன்றிய, நகர, பேரூர் கழக நிர்வாகிகள் பலரும் ஆறுதல் கூறினர். #karunanidhideath #dmk
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X