என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
செங்கோட்டை அருகே மலைப்பாதையில் நிலச்சரிவு - வாகன ஓட்டிகள் அச்சம்
Byமாலை மலர்10 Aug 2018 7:53 AM GMT (Updated: 10 Aug 2018 7:53 AM GMT)
நெல்லை மாவட்டம் செங்கோட்டை அருகே கேரள மலைப்பகுதியில் நிலச்சரிவு ஏற்பட்டு உள்ளதால் வாகனங்களில் செல்வோர் அச்சம் அடைந்துள்ளனர்.
செங்கோட்டை:
தென்மேற்குப் பருவ மழை தீவிரம் அடைந்துள்ள நிலையில், கேரளா, கர்நாடகாவில் கன மழை பெய்து வருகிறது. கேரளாவில் கன மழை மற்றும் வெள்ளத்தில் சிக்கி பலர் பலியாகியுள்ளனர். இந்த நிலையில் நெல்லை மாவட்டம் செங்கோட்டை அருகே கேரள மலைப்பகுதியில் நிலச்சரிவு ஏற்பட்டு உள்ளதால் வாகனங்களில் செல்வோர் அச்சம் அடைந்துள்ளனர்.
ஆரியங்காவுக்கும், தென்மலைக்கும் இடையே மலைப்பாதையில் எடப்பாளையம் என்ற இடம் அருகே மண் சரிந்துள்ளது. ஏற்கனவே கேரளா மலைப்பாதையில் தென்மலை அருகே விரிசல் ஏற்பட்டதால் 10 டன்னுக்கு குறைவான எடையுடன் சரக்குகளை கொண்டு செல்லும் வாகனங்கள் மட்டுமே கேரளாவுக்கு அனுமதிக்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் எடப்பாளையம் அருகே நிலச்சரிவு ஏற்பட்டுள்ளதால் கேரளாவுக்கு போக்குவரத்து முடங்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே இந்த சாலையை அதிகாரிகள் குழுவை வைத்து கண்காணித்து மண்சரிவு ஏற்படாமல் செய்யவும், சாலையை உறுதிப்படுத்தவும் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்கின்றனர் அப்பகுதி மக்கள்.
தென்மேற்குப் பருவ மழை தீவிரம் அடைந்துள்ள நிலையில், கேரளா, கர்நாடகாவில் கன மழை பெய்து வருகிறது. கேரளாவில் கன மழை மற்றும் வெள்ளத்தில் சிக்கி பலர் பலியாகியுள்ளனர். இந்த நிலையில் நெல்லை மாவட்டம் செங்கோட்டை அருகே கேரள மலைப்பகுதியில் நிலச்சரிவு ஏற்பட்டு உள்ளதால் வாகனங்களில் செல்வோர் அச்சம் அடைந்துள்ளனர்.
ஆரியங்காவுக்கும், தென்மலைக்கும் இடையே மலைப்பாதையில் எடப்பாளையம் என்ற இடம் அருகே மண் சரிந்துள்ளது. ஏற்கனவே கேரளா மலைப்பாதையில் தென்மலை அருகே விரிசல் ஏற்பட்டதால் 10 டன்னுக்கு குறைவான எடையுடன் சரக்குகளை கொண்டு செல்லும் வாகனங்கள் மட்டுமே கேரளாவுக்கு அனுமதிக்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் எடப்பாளையம் அருகே நிலச்சரிவு ஏற்பட்டுள்ளதால் கேரளாவுக்கு போக்குவரத்து முடங்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே இந்த சாலையை அதிகாரிகள் குழுவை வைத்து கண்காணித்து மண்சரிவு ஏற்படாமல் செய்யவும், சாலையை உறுதிப்படுத்தவும் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்கின்றனர் அப்பகுதி மக்கள்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X