search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    செங்கோட்டை அருகே மலைப்பாதையில் நிலச்சரிவு - வாகன ஓட்டிகள் அச்சம்
    X

    செங்கோட்டை அருகே மலைப்பாதையில் நிலச்சரிவு - வாகன ஓட்டிகள் அச்சம்

    நெல்லை மாவட்டம் செங்கோட்டை அருகே கேரள மலைப்பகுதியில் நிலச்சரிவு ஏற்பட்டு உள்ளதால் வாகனங்களில் செல்வோர் அச்சம் அடைந்துள்ளனர்.
    செங்கோட்டை:

    தென்மேற்குப் பருவ மழை தீவிரம் அடைந்துள்ள நிலையில், கேரளா, கர்நாடகாவில் கன மழை பெய்து வருகிறது. கேரளாவில் கன மழை மற்றும் வெள்ளத்தில் சிக்கி பலர் பலியாகியுள்ளனர். இந்த நிலையில் நெல்லை மாவட்டம் செங்கோட்டை அருகே கேரள மலைப்பகுதியில் நிலச்சரிவு ஏற்பட்டு உள்ளதால் வாகனங்களில் செல்வோர் அச்சம் அடைந்துள்ளனர்.

    ஆரியங்காவுக்கும், தென்மலைக்கும் இடையே மலைப்பாதையில் எடப்பாளையம் என்ற இடம் அருகே மண் சரிந்துள்ளது. ஏற்கனவே கேரளா மலைப்பாதையில் தென்மலை அருகே விரிசல் ஏற்பட்டதால் 10 டன்னுக்கு குறைவான எடையுடன் சரக்குகளை கொண்டு செல்லும் வாகனங்கள் மட்டுமே கேரளாவுக்கு அனுமதிக்கப்பட்டு வருகிறது.

    இந்த நிலையில் எடப்பாளையம் அருகே நிலச்சரிவு ஏற்பட்டுள்ளதால் கேரளாவுக்கு போக்குவரத்து முடங்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே இந்த சாலையை அதிகாரிகள் குழுவை வைத்து கண்காணித்து மண்சரிவு ஏற்படாமல் செய்யவும், சாலையை உறுதிப்படுத்தவும் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்கின்றனர் அப்பகுதி மக்கள்.

    Next Story
    ×