search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சாலையோர பள்ளத்தில் கார் கவிழ்ந்து விபத்து: பெண் உள்பட 3 பேர் படுகாயம்
    X

    சாலையோர பள்ளத்தில் கார் கவிழ்ந்து விபத்து: பெண் உள்பட 3 பேர் படுகாயம்

    கீரனூர் அருகே சாலையோர பள்ளத்தில் கார் கவிழ்ந்து விபத்துக்குள்ளாதில் பெண் உள்பட 3 பேர் படுகாயம் அடைந்தனர்.
    கீரனூர்:

    பரமக்குடியை சேர்ந்தவர் செந்தில் (வயது 32). இவர் தனது உறவினர்கள் வீரபாண்டி (39), நாகேஸ்வரி (32) ஆகிய 2 பேரையும் அழைத்து கொண்டு திருச்சிக்கு நேற்று அதிகாலை காரில் வந்து கொண்டிருந்தார். அந்த கார் கீரனூர் புறவழிச்சாலை பகுதியில் வந்து கொண்டிருந்தபோது, திடீரென கட்டுப்பாட்டை இழந்து சாலையோர பள்ளத்தில் உருண்டு அங்கிருந்த மின்கம்பத்தில் மோதி தலைகீழாக கவிழ்ந்து நின்றது.

    இதில் அந்த மின்கம்பம் உடைந்து காரின் மேல் விழுந்தது. இதனால் உடனடியாக மின்சாரம் துண்டிக்கப்பட்டது. பின்னர் காரின் இடிபாடுகளில் சிக்கி படுகாயமடைந்த பெண் உள்பட 3 பேரையும் அங்கிருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்து குறித்து கீரனூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 
    Next Story
    ×