search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    திமுக தலைவர் கருணாநிதி மறைவு: செஞ்சியில் மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி
    X

    திமுக தலைவர் கருணாநிதி மறைவு: செஞ்சியில் மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி

    தி.மு.க. தலைவர் கருணா நிதி மறைந்ததையொட்டி செஞ்சியில் தி.மு.க. மற்றும் அனைத்து கட்சியினர், வணிகர்கள் ஊர்வலமாக சென்று அஞ்சலி செலுத்தினர். #karunanidhideath #dmk

    செஞ்சி:

    தி.மு.க. தலைவர் கருணாநிதி மறைந்ததையொட்டி செஞ்சியில் தி.மு.க. மற்றும் அனைத்து கட்சியினர், வணிகர்கள் ஊர்வலமாக சென்று அஞ்சலி செலுத்தினர். செட்டிப்பாளையம் குளக்கரையில் இருந்து புறப்பட்ட இந்த மவுன ஊர்வலம் மற்றும் கூட்ரோட்டில் நடந்த இறுதி அஞ்சலி நிகழ்ச்சிக்கு தி.மு.க. நகர செயலாளர் காஜாநஜீர் தலைமை தாங்கினார். ஊர்வலம் முடிந்து இறுதி அஞ்சலி நிகழ்ச்சிக்குப்பின் மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தப்பட்டது.

    நிகழ்ச்சியில் தி.மு.க. சார்பில் மாவட்ட வக்கீல் அணி மணிவண்ணன், மாவட்ட வர்த்தகர் அணி மோகன், மாவட்ட பொறி யாளர் அணி ரசூல்பாஷா மற்றும் நிர்வாகிகள் செயல்மணி, தமிழ்ச்செல்வி, கர்ணன், பாஷா, காங்கிரஸ் சார்பில் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர் ரங்கபூபதி, ம.தி.மு.க. மாநில துணை பொதுச்செயலாளர் ஏ.கே.மணி, பா.ம.க. மாவட்ட செயலர் கனல்பெருமாள், விடுதலை சிறுத்தை கட்சி நகர செயலர் செஞ்சி சிவா, தமிழக முஸ்லிம் முன்னேற்ற கழக மாவட்ட செயலாளர் உஸ்மான், வர்த்தக சங்க தலைவர்கள் செல்வராஜ், ஆதிஷ்பாஷா, வெங்கட், கலியமூர்த்தி, ராஜகோபால் உள்பட பலர் கலந்து கொண்டனர். #karunanidhideath #dmk

    Next Story
    ×