search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    அரியலூர், பெரம்பலூர் மாவட்டங்களில் கருணாநிதி மறைவுக்கு தி.மு.க.வினர் பொதுமக்கள் அஞ்சலி
    X

    அரியலூர், பெரம்பலூர் மாவட்டங்களில் கருணாநிதி மறைவுக்கு தி.மு.க.வினர் பொதுமக்கள் அஞ்சலி

    அரியலூர், பெரம்பலூர் மாவட்டங்களில் கருணாநிதி மறைவுக்கு தி.மு.க.வினர், பொதுமக்கள் அஞ்சலி செலுத்தினர். #karunanidhideath #dmk
    ஜெயங்கொண்டம்:

    அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் அருகே உள்ள செங்குந்தபுரம் கிராமத்தில் தி.மு.க. தலைவர் கருணாநிதி மறைவையொட்டி தி.மு.க. கிளை செயலாளர் ஞானப்பிரகாசம் தலைமையில், பெண்கள் உள்பட 50–க்கும் மேற்பட்டோர் கருணாநிதி உருவப்படத்தை கையில் ஏந்தி அமைதி ஊர்வலமாக சென்றனர். ஊர்வலம் செங்குந்தபுரத்தில் இருந்து தொடங்கி முக்கிய வீதிகள் வழியாக சென்று மீண்டும் செங்குந்தபுரம் பஸ் நிறுத்தத்திற்கு வந்தடைந்தனர். பின்னர் அங்கு வைக்கப்பட்டிருந்த கருணாநிதி உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி அஞ்சலி செலுத்தினர். இதில் தி.மு.க. நிர்வாகிகள், தொண்டர்கள், பொதுமக்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    இதேபோல் வி.கைகாட்டியிலும் தி.மு.க.வினர் மற்றும் பொதுமக்கள் கருணாநிதி உருவப்படத்திற்கு மலர்தூவி அஞ்சலி செலுத்தினர்.

    தி.மு.க. தலைவர் கருணாநிதி மறைவையொட்டி, பெரம்பலூர் மாவட்டம், குன்னம் அருகே சிறுகுடல் கிராமத்தில் தி.மு.க. சார்பில் 18 பேர் மொட்டையடித்து, அப்பகுதியில் வைக்கப்பட்டு உள்ள கருணாநிதி உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி அஞ்சலி செலுத்தினர். தொடர்ந்து அப்பகுதியில் உள்ள முக்கிய வீதிகள் வழியாக அமைதி ஊர்வலம் சென்றனர்.

    வேப்பூர் கிராமத்தில் தி.மு.க. தொண்டர்கள் கருணாநிதி உருவப்படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினர். குன்னம் ஊராட்சி செயலாளர் மதியழகன் தலைமையில், கருணாநிதி உருவப்படத்திற்கு அஞ்சலி செலுத்தினர்.

    இதேபோல் குன்னம் அருகே உள்ள சு.ஆடுதுறை கிராமத்தில் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் பச்சமுத்து தலைமையில், தி.மு.க. கருணாநிதி உருவப்படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினர். குன்னம் பகுதியில் உள்ள அனைத்து ஊராட்சியிலும் தி.மு.க. கருணாநிதி உருவப்படத்திற்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர். #karunanidhideath #dmk
    Next Story
    ×