search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    வடமதுரை அருகே அதிர்ச்சியில் தி.மு.க. தொண்டர்கள் உயிரிழப்பு
    X

    வடமதுரை அருகே அதிர்ச்சியில் தி.மு.க. தொண்டர்கள் உயிரிழப்பு

    வடமதுரை அருகே கருணாநிதி மறைவால் தி.மு.க. தொண்டர்கள் 2 பேர் அதிர்ச்சியில் உயிரிழந்தனர்.
    வடமதுரை:

    தி.மு.க. தலைவர் கருணாநிதி மறைவை யொட்டி பல்வேறு பகுதிகளில் அவருக்கு கண்ணீர் அஞ்சலி செலுத்தப்பட்டது. வடமதுரை 11-வது வார்டு பகுதியைச் சேர்ந்தவர் ராஜாங்கம் (வயது 56). தி.மு.க. அனுதாபி. அதே பகுதியில் சைக்கிள் கடை வைத்துள்ளார்.

    நேற்று மாலை கருணாநிதி மறைவு குறித்த செய்தியை டி.வி.யில் பார்த்துக் கொண்டு இருந்தார். அப்போது திடீரென அவருக்கு நெஞ்சு வலி ஏற்பட்டு உயிரிழந்தார்.

    வடமதுரை அருகே உள்ள கல்பட்டி சத்திரம் பொம்மகம்மாவூர் பகுதியைச் சேர்ந்தவர் தங்கராசு (45). அரசு போக்குவரத்து கழகத்தில் கண்டக்டராக பணிபுரிந்து வந்தார். நேற்று அரசு பஸ்கள் இயங்காததால் வீட்டில் கருணாநிதி மறைவு குறித்த செய்தியை டி.வி.யில் பார்த்துக் கொண்டு இருந்தார்.

    அப்போது திடீரென மாரடைப்பு ஏற்பட்டது. சிறிது நேரத்தில் உயிரிழந்தார். இது குறித்து தகவல் அறிந்ததும் தி.மு.க. தொண்டர்கள் மற்றும் போக்குவரத்துக் கழக ஊழியர்கள் அவருக்கு அஞ்சலி செலுத்தினர்.

    Next Story
    ×