என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
கருணாநிதி மரணம் - குமரி தி.மு.க. தொண்டர்கள் 3 பேர் அதிர்ச்சியில் உயிரிழப்பு
Byமாலை மலர்9 Aug 2018 10:20 AM GMT (Updated: 9 Aug 2018 10:20 AM GMT)
தி.மு.க. தலைவர் கருணாநிதி மரணம் அடைந்த அதிர்ச்சியில் தி.மு.க.வினர் 3 பேர் குமரி மாவட்டத்தில் இறந்துள்ளனர்.
குலசேகரம்:
குலசேகரம் அருகே உள்ள உண்ணீர் கோணத்தைச் சேர்ந்தவர் கிறிஸ்துதாஸ் (வயது52). இவர் குமரி மேற்கு மாவட்ட தி.மு.க. ஆதி திராவிடர் துணைச் செயலாளராக பணியாற்றி வந்தார்.
இவர் நேற்று காலை முதல் தி.மு.க. தலைவர் கருணாநிதியின் இறுதி ஊர்வலத்தை டி.வி.யில் பார்த்துக் கொண்டிருந்தார். மாலையில் திடீரென்று கிறிஸ்துதாசுக்கு நெஞ்சுவலி ஏற்பட்டது. உடனடியாக அவரை அருகில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டுச்சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
அஞ்சுகிராமம் அருகே உள்ள கனகப்பபுரத்தைச் சேர்ந்தவர் சாமிகண்நாடார்(62). நீண்ட கால தி.மு.க. உறுப்பினரான இவர் தி.மு.க. தலைவர் கருணாநிதி காவேரி ஆஸ்பத்திரியில் அனு மதிக்கப்பட்டது முதல் மனவேதனையுடன் காணப்பட்டார். இந்த நிலையில் கருணாநிதியின் இறுதி ஊர்வலத்தை டி.வி.யில் பார்த்துக் கொண்டிருந்த போது திடீரென மயங்கி விழுந்து இறந்து விட்டார்.
திக்கணங்கோடு பகுதியைச் சேர்ந்தவர் அலெக்சாண்டர்(60). தீவிர தி.மு.க. தொண்டரான இவர் கருணாநிதி மரணம் அடைந்த செய்தி கேட்டு மயங்கி விழுந்தார்.
அவரை உறவினர்கள் அருகில் உள்ள ஆஸ்பத்திரிக்கு கொண்டுச் சென்றனர். அவரை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். தி.மு.க. தொண்டர்கள் 3 பேர் பலியானது அவர்களது குடும்பத்தினரை சோகத்தில் ஆழ்த்தி உள்ளது. தி.மு.க. நிர்வாகிகளும் அவர்களது உட லுக்கு அஞ்சலி செலுத்தினார்கள்.
குலசேகரம் அருகே உள்ள உண்ணீர் கோணத்தைச் சேர்ந்தவர் கிறிஸ்துதாஸ் (வயது52). இவர் குமரி மேற்கு மாவட்ட தி.மு.க. ஆதி திராவிடர் துணைச் செயலாளராக பணியாற்றி வந்தார்.
இவர் நேற்று காலை முதல் தி.மு.க. தலைவர் கருணாநிதியின் இறுதி ஊர்வலத்தை டி.வி.யில் பார்த்துக் கொண்டிருந்தார். மாலையில் திடீரென்று கிறிஸ்துதாசுக்கு நெஞ்சுவலி ஏற்பட்டது. உடனடியாக அவரை அருகில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டுச்சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
அஞ்சுகிராமம் அருகே உள்ள கனகப்பபுரத்தைச் சேர்ந்தவர் சாமிகண்நாடார்(62). நீண்ட கால தி.மு.க. உறுப்பினரான இவர் தி.மு.க. தலைவர் கருணாநிதி காவேரி ஆஸ்பத்திரியில் அனு மதிக்கப்பட்டது முதல் மனவேதனையுடன் காணப்பட்டார். இந்த நிலையில் கருணாநிதியின் இறுதி ஊர்வலத்தை டி.வி.யில் பார்த்துக் கொண்டிருந்த போது திடீரென மயங்கி விழுந்து இறந்து விட்டார்.
திக்கணங்கோடு பகுதியைச் சேர்ந்தவர் அலெக்சாண்டர்(60). தீவிர தி.மு.க. தொண்டரான இவர் கருணாநிதி மரணம் அடைந்த செய்தி கேட்டு மயங்கி விழுந்தார்.
அவரை உறவினர்கள் அருகில் உள்ள ஆஸ்பத்திரிக்கு கொண்டுச் சென்றனர். அவரை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். தி.மு.க. தொண்டர்கள் 3 பேர் பலியானது அவர்களது குடும்பத்தினரை சோகத்தில் ஆழ்த்தி உள்ளது. தி.மு.க. நிர்வாகிகளும் அவர்களது உட லுக்கு அஞ்சலி செலுத்தினார்கள்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X