search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    வில்லியனூர் அருகே தனியார் தொழிற்சாலையில் தீ விபத்து
    X

    வில்லியனூர் அருகே தனியார் தொழிற்சாலையில் தீ விபத்து

    வில்லியனூர் அருகே தனியார் தொழிற்சாலையில் நள்ளிரவில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தில் பல லட்சம் பொருட்கள் எரிந்து சேதமானது.
    புதுச்சேரி:

    வில்லியனூர் அருகே ஆரியபாளையத்தில் நூலுக்கு பாவு தோய்க்கும் தனியார் தொழிற்சாலை உள்ளது. இந்த தொழிற்சாலையில் நேற்று நள்ளிரவு திடீரென தீ விபத்து ஏற்பட்டது. சிறிது நேரத்தில் தீ மளமளவென தொழிற்சாலை முழுவதும் பரவியது.

    இதுபற்றி தகவல் அறிந்ததும் வில்லியனூர் தீயணைப்பு படையினர் விரைந்து வந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். ஆனால், தீயை கட்டுப்படுத்த முடியவில்லை.

    இதையடுத்து திருபுவனை, திருக்கனூர், கோரிமேடு உள்ளிட்ட பகுதிகளில் இருந்து தீயணைப்பு வண்டிகள் வரவழைக்கப்பட்டன. தீயணைப்பு வீரர்கள் தொடர்ந்து இன்று காலை வரை போராடி தீயை அணைத்தனர். எனினும் தொழிற்சாலை முழுவதும் எரிந்து போனது.

    இந்த தீ விபத்தில் பல லட்சம் பொருட்கள் எரிந்து சேதமானது. தீ விபத்து நடந்த தொழிற்சாலையை கலெக்டர் அபிஜித் விஜய்சவுத்ரி, சீனியர் போலீஸ் சூப்பிரண்டு அபூர்வா குப்தா ஆகியோர் பார்வையிட்டு விசாரணை மேற்கொண்டனர்.

    தீ விபத்துக்கான காரணம் குறித்து வில்லியனூர் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    Next Story
    ×