search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    நேரு முதல் மோடி வரை அனைத்து பிரதமர்களையும் பார்த்த சட்டமன்ற கதாநாயகன்
    X

    நேரு முதல் மோடி வரை அனைத்து பிரதமர்களையும் பார்த்த சட்டமன்ற கதாநாயகன்

    நேரு பிரதமராக இருந்த 1957-ம் ஆண்டில் தமிழக சட்டசபைக்குள் நுழைந்த கருணாநிதி மறையும் வரை சட்டமன்ற உறுப்பினராக இருந்துள்ளார் என்பது தனிப்பட்ட சிறப்பம்சமாகும். #Karunanidhideath #MarinaBeach #Karunanidhi #DMK #RIPKalaignar
    சென்னை:

    திராவிட முன்னேற்ற கழகம் தொடங்கப்பட்ட பின்னர் முதல் பலப்பரீட்சையாக 1957-ம் ஆண்டு அக்கட்சி சந்தித்த பொதுத்தேர்தலில் கருணாநிதி, குளித்தலை தொகுதியில் போட்டியிட்டு வென்று சட்டசபைக்குள் நுழைந்தார். அப்போது நாட்டின் பிரதமராக நேரு இருந்தார்.

    நேருவுக்கு பிறகு லால் பகதூர் சாஸ்திரி, இந்திரா காந்தி, மொராஜி தேசாய், சரண் சிங், ராஜிவ் காந்தி, விபி சிங், சந்திரசேகர், நரசிம்ம ராவ், தேவே கவுடா, குஜ்ரால், வாஜ்பாய், மன்மோகன்சிங், மோடி என 13 பிரதமர்களையும் பார்த்துள்ள கருணாநிதி திரூவாரூர் சட்டமன்ற உறுப்பினராகவே மறைந்துள்ளார்.

    60 ஆண்டுகள் சட்டமன்ற உறுப்பினராக இருந்த கதாநாயகன் கருணாநிதியை தவிர இந்த சாதனையை யாராலும் செய்திருக்க வாய்ப்பு இல்லை. 
    Next Story
    ×