என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
கருணாநிதி மறைவு- தி.மு.க மேடை பாடகர் உள்பட 3 பேர் அதிர்ச்சியில் உயிரிழப்பு
Byமாலை மலர்8 Aug 2018 10:02 AM GMT (Updated: 8 Aug 2018 10:03 AM GMT)
கருணாநிதி மரணம் அடைந்ததை கேட்ட அதிர்ச்சியில் திமுக மேடை பாடகர் உள்பட திமுக தொண்டர்கள் 3 பேர் உயிரிழந்துள்ளனர். #RIPKarunanidhi #Karunanidhi #DMK
குத்தாலம்:
தி.மு.க தலைவர் கருணாநிதி நேற்று மாலை 6.10 மணிக்கு காலமானார். இந்த செய்தியை அறிந்து நாகை மாவட்டத்தில் 3 தி.மு.க தொண்டர்கள் மரணம் அடைந்தனர்.
நாகை மாவட்டம் குத்தாலம் அருகே உள்ள நெய்குப்பை தெற்கு தெருவைச் சேர்ந்தவர் தங்கவேலு. இவரது மகன் சுப்பிரமணியன் (வயது 68). தி.மு.க ஒன்றிய பிரதிநிதி ஆவார். இவர் நேற்று இரவு அவரது வீட்டில் டி.வி பார்த்து கொண்டிருந்தார். அப்போது கருணாநிதி மறைந்த செய்தி வந்தது. உடனே அதிர்ச்சி அடைந்த அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே இறந்தார்.
இதேபோல் பெரம்பூர் மேலத்தெருவைச் சேர்ந்தவர் ராஜேந்திரன் (வயது 64). தி.மு.க மேடை பாடகர் ஆவார்.
இவரும் நேற்று தி.மு.க தலைவர் கருணாநிதி இறந்த செய்தி அறிந்து அவரது வீட்டில் மயங்கி விழுந்தார். அவரை அப்பகுதியில் உள்ளவர்கள் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். அவரை பரிசோதித்த டாக்டர்கள் இறந்து விட்டதாக கூறினர்.
மயிலாடுதுறை அருகே கொற்கை அம்பேத்கார் நகரைச் சேர்ந்தவர் கொஞ்சான். இவரது மகன் நாகராஜ். தி.மு.க தொண்டர் ஆவார். இவர் நேற்று மாலையில் டி.வி பார்த்து கொண்டிருந்தார். அப்போது கருணாநிதி மறைந்த செய்தி வந்தது. இதை கேட்ட நாகராஜிக்கு மாரடைப்பு ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே இறந்தார். #RIPKarunanidhi #Karunanidhi #DMK
தி.மு.க தலைவர் கருணாநிதி நேற்று மாலை 6.10 மணிக்கு காலமானார். இந்த செய்தியை அறிந்து நாகை மாவட்டத்தில் 3 தி.மு.க தொண்டர்கள் மரணம் அடைந்தனர்.
நாகை மாவட்டம் குத்தாலம் அருகே உள்ள நெய்குப்பை தெற்கு தெருவைச் சேர்ந்தவர் தங்கவேலு. இவரது மகன் சுப்பிரமணியன் (வயது 68). தி.மு.க ஒன்றிய பிரதிநிதி ஆவார். இவர் நேற்று இரவு அவரது வீட்டில் டி.வி பார்த்து கொண்டிருந்தார். அப்போது கருணாநிதி மறைந்த செய்தி வந்தது. உடனே அதிர்ச்சி அடைந்த அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே இறந்தார்.
இதேபோல் பெரம்பூர் மேலத்தெருவைச் சேர்ந்தவர் ராஜேந்திரன் (வயது 64). தி.மு.க மேடை பாடகர் ஆவார்.
இவரும் நேற்று தி.மு.க தலைவர் கருணாநிதி இறந்த செய்தி அறிந்து அவரது வீட்டில் மயங்கி விழுந்தார். அவரை அப்பகுதியில் உள்ளவர்கள் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். அவரை பரிசோதித்த டாக்டர்கள் இறந்து விட்டதாக கூறினர்.
மயிலாடுதுறை அருகே கொற்கை அம்பேத்கார் நகரைச் சேர்ந்தவர் கொஞ்சான். இவரது மகன் நாகராஜ். தி.மு.க தொண்டர் ஆவார். இவர் நேற்று மாலையில் டி.வி பார்த்து கொண்டிருந்தார். அப்போது கருணாநிதி மறைந்த செய்தி வந்தது. இதை கேட்ட நாகராஜிக்கு மாரடைப்பு ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே இறந்தார். #RIPKarunanidhi #Karunanidhi #DMK
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X