search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    திருவண்ணாமலை மாவட்டத்தில் தி.மு.க. தொண்டர்கள் 2 பேர் அதிர்ச்சியில் மரணம்
    X

    திருவண்ணாமலை மாவட்டத்தில் தி.மு.க. தொண்டர்கள் 2 பேர் அதிர்ச்சியில் மரணம்

    திமுக தலைவர் கருணாநிதி நேற்று மாலை மரணம் அடைந்ததை கேட்ட அதிர்ச்சியில் திருவண்ணாமலை மாவட்டத்தில் திமுக தொண்டர்கள் 2 பேர் உயிரிழந்துள்ளனர். #RIPKarunanidhi #Karunanidhi #DMK
    செய்யாறு:

    திருவண்ணாமலை மாவட்டம் கலசப்பாக்கம் அடுத்த ஆதமங்கலம் புதூரை சேர்ந் தவர் வெங்கடேசன் (வயது 48). தி.மு.க. பிரமுகர். இவரது மனைவி சுமதி. இவர்களுக்கு 2 மகன்கள் மற்றும் ஒரு மகள் உள்ளனர். வெங்கசேடன் தி.மு.க. தலைவர் கருணாநிதி மரணமடைந்த செய்தியை டி.வி.யில் பார்த்து கொண்டு இருந்தபோது, அதிர்ச்சியில் மாரடைப்பு ஏற்பட்டது.

    குடும்பத்தினர் அவரை மீட்டு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால், வழியிலேயே வெங்க டேசன் இறந்துவிட்டார்.

    ஆரணி அம்பேத்கர் நகரை சேர்ந்தவர் பெருமாள் மனைவி பாப்பாம்மாள் என்கிற நர்கீஸ். இவர், கருணாநிதி மரணமடைந்த அதிர்ச்சியில் இன்று அதிகாலை திடீரென உயிரிழந்தார். #RIPKarunanidhi #Karunanidhi #DMK
    Next Story
    ×