என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
சாலை ஓரங்களில் கருணாநிதி படத்துக்கு தொண்டர்கள் அஞ்சலி
Byமாலை மலர்8 Aug 2018 6:06 AM GMT (Updated: 8 Aug 2018 6:06 AM GMT)
காஞ்சீபுரம் நகரின் பல்வேறு பகுதிகளில் சாலைகள் ஓரம் கருணாநிதியின் உருவப்படத்துக்கு மாலை அணிவித்து மலர் தூவி கண்ணீர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். #RIPKarunanidhi #Karunanidhi #DMK
காஞ்சீபுரம்:
தி.மு.க.வின் வரலாற்றில் காஞ்சீபுரம் முக்கியப் பங்கு வகிக்கின்றது. அக்கட்சியினை தோற்றுவித்த அறிஞர் அண்ணாவின் சொந்த ஊர் காஞ்சீபுரம் ஆகும்.
மறைந்த கருணாநிதி காஞ்சீபுரத்தில் இருந்த திராவிட நாடு பத்திரிகை அலுவலகத்தில்தான் பெரும் காலத்தினை கழித்தவர். கருணாநிதிக்கு மிகவும் பிடித்த ஊரான காஞ்சீபுரத்தில் அவரின் மறைவு பெரும் தாக்கத்தினை ஏற்படுத்தியுள்ளது.
மாவட்டம் முழுவதும் போக்குவரத்து சேவை முற்றிலுமாக முடங்கியது. கடைகள் அனைத்தும் அடைக்கப்பட்டன.
டி.ஐ.ஜி. தேன்மொழி, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சந்தோஷ் ஹதிமானி, உதவி போலீஸ் சூப்பிரண்டு பாலசுப்பிரமணியன் தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர்.
காஞ்சீபுரம் நகரின் பல்வேறு பகுதிகளில் சாலைகள் ஓரம் கருணாநிதியின் உருவப்படத்துக்கு மாலை அணிவித்து மலர் தூவி கண்ணீர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
காஞ்சீபுரம் அடுத்த பொன்னேரிக்கரை சென்னை-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் நூற்றுக்கணக்கான வேன்கள் மற்றும் லாரிகளில் பல்லாயிரக்கணக்கான தொண்டர்கள் கருணாநிதி உடலுக்கு அஞ்சலி செலுத்த சென்னை நோக்கிச் சென்றனர். #RIPKarunanidhi #Karunanidhi #DMK
தி.மு.க.வின் வரலாற்றில் காஞ்சீபுரம் முக்கியப் பங்கு வகிக்கின்றது. அக்கட்சியினை தோற்றுவித்த அறிஞர் அண்ணாவின் சொந்த ஊர் காஞ்சீபுரம் ஆகும்.
மறைந்த கருணாநிதி காஞ்சீபுரத்தில் இருந்த திராவிட நாடு பத்திரிகை அலுவலகத்தில்தான் பெரும் காலத்தினை கழித்தவர். கருணாநிதிக்கு மிகவும் பிடித்த ஊரான காஞ்சீபுரத்தில் அவரின் மறைவு பெரும் தாக்கத்தினை ஏற்படுத்தியுள்ளது.
மாவட்டம் முழுவதும் போக்குவரத்து சேவை முற்றிலுமாக முடங்கியது. கடைகள் அனைத்தும் அடைக்கப்பட்டன.
டி.ஐ.ஜி. தேன்மொழி, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சந்தோஷ் ஹதிமானி, உதவி போலீஸ் சூப்பிரண்டு பாலசுப்பிரமணியன் தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர்.
காஞ்சீபுரம் நகரின் பல்வேறு பகுதிகளில் சாலைகள் ஓரம் கருணாநிதியின் உருவப்படத்துக்கு மாலை அணிவித்து மலர் தூவி கண்ணீர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
காஞ்சீபுரம் அடுத்த பொன்னேரிக்கரை சென்னை-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் நூற்றுக்கணக்கான வேன்கள் மற்றும் லாரிகளில் பல்லாயிரக்கணக்கான தொண்டர்கள் கருணாநிதி உடலுக்கு அஞ்சலி செலுத்த சென்னை நோக்கிச் சென்றனர். #RIPKarunanidhi #Karunanidhi #DMK
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X