என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
குண்டடம் ஊராட்சியில் வளர்ச்சி திட்டபணிகள் - அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் ஆய்வு
Byமாலை மலர்7 Aug 2018 10:38 AM GMT (Updated: 7 Aug 2018 10:38 AM GMT)
திருப்பூர் மாவட்டம், குண்டடம் ஊராட்சியில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சித்திட்ட பணிகள் குறித்து அமைச்சர் உடுமலை கே.ராதாகிருஷ்ணன் ஆய்வு நடத்தினார்.
திருப்பூர்:
திருப்பூர் மாவட்டம், குண்டடம் ஊராட்சி ஒன்றிய அலுவலக கூட்டரங்கில் குண்டடம் ஊராட்சி ஒன்றியத்தில் ஊரக வளர்ச்சித்துறையின் சார்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சித்திட்ட பணிகள் குறித்த ஆய்வுக்கூட்டம் கலெக்டர் கே.எஸ்.பழனி சாமி முன்னிலையில் அமைச்சர் உடுமலை கே.ராதா கிருஷ்ணன் தலைமையில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் அமைச்சர் ராதாகிருஷ்ணன் பேசியதாவது,
திருப்பூர் மாவட்டத்திலுள்ள குண்டடம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட 24 ஊராட்சி பகுதிகளில் ஊரக வளர்ச்சித்துறையின் சார்பில் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டுத்திட்டம், பாராளுமன்ற உறுப்பினர் உள்ளுர் வளர்ச்சித்திட்டம், ஒன்றிய பொது நிதி, முதலமைச்சரின் சூரிய மின் சக்தியுடன் கூடிய பசுமை வீடுகள் கட்டும் திட்டம், தமிழ்நாடு ஊரக சாலைகள் மேம்பாட்டுத்திட்டம், பிரதம மந்திரி வீடுகள் கட்டும் திட்டம், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டப்பணிகள், தனிநபர் இல்ல கழிப்பறைகள் கட்டும் திட்டம்,
கனிம மற்றும் சுரங்கப்பணிகள், 14 வது நிதிக்குழு மானிய பணிகள், நபார்டு திட்டம் மற்றும் பிரதம மந்திரி கிராம சாலைகள் திட்டம் மற்றும் பிற துறைகளின் சார்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சித்திட்ட பணிகள் குறித்து ஊராட்சி வாரியாக விரிவாக ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. பொது மக்களின் அடிப்படை தேவைகளான குடிநீர், சாலை வசதி, மின்சாரம் மற்றும் சாக்கடை வசதிகள் ஆகியவை முழுமையாக கிடைத்திட அனைத்துத்துறை அலுவலர்களுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அனைத்து அலுவலர்களும் ஒருங்கிணைந்து செயல்பட்டு நமது மாவட்டத்திற்கு பெருமை சேர்த்திட வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
தொடர்ந்து, ருத்ராவதி பேரூராட்சிக்குட்பட்ட 15 வார்டு பகுதிகளில் பேரூராட்சிகளின் துறைகளின் சார்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சித்திட்ட பணிகள் குறித்தும் அனைத்துத் துறை அலுவலர்களுடன் அமைச்சர் உடுமலை கே.ராதாகிருஷ்ணன் ஆய்வு மேற்கொண்டார்கள்.
இந்நிகழ்வின் போது, ஈரோடு நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.செல்வக்குமார சின்னையன், காங்கயம் சட்டமன்ற உறுப்பினர் உ.தனியரசு, தாராபுரம் சட்டமன்ற உறுப்பினர்வி. எஸ்.காளிமுத்து, மாவட்ட வருவாய் அலுவலர்ச. பிரசன்னா ராமசாமி, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்கு ர் ரமேஷ் குமார், குண்டடம் வட்டார வளர்ச்சி மணிகண்டன், கலைச்செல்வி, ருத்ராவதி பேரூராட்சி செயல் அலுவலர் முருகன், அரசு அலுவலர்கள் மற்றும் முன்னாள் உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள், கூட்டுறவு சங்க தலைவர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
திருப்பூர் மாவட்டம், குண்டடம் ஊராட்சி ஒன்றிய அலுவலக கூட்டரங்கில் குண்டடம் ஊராட்சி ஒன்றியத்தில் ஊரக வளர்ச்சித்துறையின் சார்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சித்திட்ட பணிகள் குறித்த ஆய்வுக்கூட்டம் கலெக்டர் கே.எஸ்.பழனி சாமி முன்னிலையில் அமைச்சர் உடுமலை கே.ராதா கிருஷ்ணன் தலைமையில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் அமைச்சர் ராதாகிருஷ்ணன் பேசியதாவது,
திருப்பூர் மாவட்டத்திலுள்ள குண்டடம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட 24 ஊராட்சி பகுதிகளில் ஊரக வளர்ச்சித்துறையின் சார்பில் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டுத்திட்டம், பாராளுமன்ற உறுப்பினர் உள்ளுர் வளர்ச்சித்திட்டம், ஒன்றிய பொது நிதி, முதலமைச்சரின் சூரிய மின் சக்தியுடன் கூடிய பசுமை வீடுகள் கட்டும் திட்டம், தமிழ்நாடு ஊரக சாலைகள் மேம்பாட்டுத்திட்டம், பிரதம மந்திரி வீடுகள் கட்டும் திட்டம், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டப்பணிகள், தனிநபர் இல்ல கழிப்பறைகள் கட்டும் திட்டம்,
கனிம மற்றும் சுரங்கப்பணிகள், 14 வது நிதிக்குழு மானிய பணிகள், நபார்டு திட்டம் மற்றும் பிரதம மந்திரி கிராம சாலைகள் திட்டம் மற்றும் பிற துறைகளின் சார்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சித்திட்ட பணிகள் குறித்து ஊராட்சி வாரியாக விரிவாக ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. பொது மக்களின் அடிப்படை தேவைகளான குடிநீர், சாலை வசதி, மின்சாரம் மற்றும் சாக்கடை வசதிகள் ஆகியவை முழுமையாக கிடைத்திட அனைத்துத்துறை அலுவலர்களுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அனைத்து அலுவலர்களும் ஒருங்கிணைந்து செயல்பட்டு நமது மாவட்டத்திற்கு பெருமை சேர்த்திட வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
தொடர்ந்து, ருத்ராவதி பேரூராட்சிக்குட்பட்ட 15 வார்டு பகுதிகளில் பேரூராட்சிகளின் துறைகளின் சார்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சித்திட்ட பணிகள் குறித்தும் அனைத்துத் துறை அலுவலர்களுடன் அமைச்சர் உடுமலை கே.ராதாகிருஷ்ணன் ஆய்வு மேற்கொண்டார்கள்.
இந்நிகழ்வின் போது, ஈரோடு நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.செல்வக்குமார சின்னையன், காங்கயம் சட்டமன்ற உறுப்பினர் உ.தனியரசு, தாராபுரம் சட்டமன்ற உறுப்பினர்வி. எஸ்.காளிமுத்து, மாவட்ட வருவாய் அலுவலர்ச. பிரசன்னா ராமசாமி, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்கு ர் ரமேஷ் குமார், குண்டடம் வட்டார வளர்ச்சி மணிகண்டன், கலைச்செல்வி, ருத்ராவதி பேரூராட்சி செயல் அலுவலர் முருகன், அரசு அலுவலர்கள் மற்றும் முன்னாள் உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள், கூட்டுறவு சங்க தலைவர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X