search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    திண்டுக்கல்லில் ஒர்க்ஷாப் தொழிலாளர்கள் கண்டன ஆர்ப்பாட்டம்
    X

    திண்டுக்கல்லில் ஒர்க்ஷாப் தொழிலாளர்கள் கண்டன ஆர்ப்பாட்டம்

    திண்டுக்கல்லில் ஒர்க்ஷாப் தொழிலாளர்கள், டிரைவிங் பயிற்சி பள்ளி அலுவலர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

    திண்டுக்கல்:

    நாட்டில் ஏற்படும் சாலை விபத்துக்களை குறைக்கும் வகையில் மோட்டார் வாகன சட்டத்தை திருத்த முடிவு செய்தது. அதன்படி பல முக்கிய அம்சங்களை கொண்ட வரைவு சட்ட திருத்தத்தை உருவாக்கி உள்ளது.

    இதில் விபத்தை ஏற்படுத்துவது, உரிமம் இல்லாமல் வாகனம் ஓட்டுவது போன்ற குற்றங்களுக்கு அபராத தொகை பல மடங்கு உயர்த்தப்பட்டது.

    மேலும் போக்குவரத்து துறை தனியார் மயமாக்கப் படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை வாபஸ் பெற கோரி பல்வேறு தொழிற்சங்கங்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். திண்டுக்கல்லில் ஒர்க்ஷாப் தொழிலாளர்கள், ஆட்டோ தொழிலாளர் சங்கத்தினர், டிரைவிங் பயிற்சி பள்ளி நிர்வாகிகள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

    மோட்டார் வாகன சட்ட திருத்தத்தை திரும்ப பெற வேண்டும், பெட்ரோல், டீசல் விலையை குறைக்க வேண்டும், இன்சூரன்ஸ் என்ற பெயரில் அடிக்கும் கொள்ளையை நிறுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோ‌ஷங்கள் எழுப்பப்பட்டது.

    Next Story
    ×