search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    காட்டுமன்னார்கோவில் அருகே மணல் கடத்திய டிராக்டர் பறிமுதல்
    X

    காட்டுமன்னார்கோவில் அருகே மணல் கடத்திய டிராக்டர் பறிமுதல்

    காட்டுமன்னார்கோவில் அருகே அனுமதியின்றி மணல் கடத்திய வாலிபரை போலீசார் தேடி வருகின்றனர்.
    ஸ்ரீமுஷ்ணம்:

    காட்டுமன்னார்கோவில் அருகே வீரசோழபுரத்தில் கொள்ளிடம் ஆறு செல்கிறது. இந்த ஆற்றில் இரவு நேரத்தில் மர்ம நபர்கள் டிராக்டர்களில் அனுமதி பெறாமல் மணல் கடத்தி செல்வதாக காட்டுமன்னார்கோவில் போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

    அதன்பேரில் நேற்று இரவு இன்ஸ்பெக்டர் ஷியாம்சுந்தர் மற்றும் போலீசார் கொள்ளிடம் ஆற்றங்கரைக்கு ரோந்து சென்றனர். அப்போது அங்கு ஒருவர் டிராக்டரில் மணல் அள்ளிக்கொண்டிருந்தார். போலீசாரை கண்டதும் அந்த வாலிபர் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார்.

    அனுமதி பெறாமல் மணல் ஏற்றப்பட்ட டிராக்டரை போலீசார் பறிமுதல் செய்து தப்பியோடி வாலிபரை தேடி வருகின்றனர்.

    Next Story
    ×