search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மெரினாவில் நினைவிடம் அமைப்பதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை தள்ளுபடி செய்தது ஐகோர்ட்
    X

    மெரினாவில் நினைவிடம் அமைப்பதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை தள்ளுபடி செய்தது ஐகோர்ட்

    சென்னை மெரினா கடற்கரையில் நினைவிடம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து தொடரப்பட்ட வழக்கை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. #MadrasHighCourt #MemorialInMarina
    சென்னை:

    சென்னை மெரினா கடற்கரையில் அண்ணா, எம்ஜிஆர் நினைவிடங்கள் உள்ளன. எம்ஜிஆர் நினைவிட வளாகத்தில் ஜெயலலிதா சமாதியும் உள்ளது. அவருக்கு அந்த இடத்தில் நினைவிடம் கட்டும் பணிகளை அரசு தொடங்கி உள்ளது.

    இந்நிலையில், சொத்துக் குவிப்பு வழக்கில் குற்றவாளியாக அறிவிக்கப்பட்ட ஜெயலலிதாவுக்கு மெரினாவில் நினைவிடம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து டிராபிக் ராமசாமி உள்ளிட்ட பலர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்குகளை ஒன்றாக  விசாரிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

    இதற்கிடையே மெரினாவில் நினைவிடம் அமைத்தால் அதன் இயற்கை அழகு சீர்கெட்டுவிடும் எனக்கூறி வழக்கறிஞர் காந்திமதி கடந்த வாரம் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். அவரது மனு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரர் தனது வழக்கை வாபஸ் பெறுவதாக கூறினார். இதையடுத்து காந்திமதியின் மனுவை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. #MadrasHighCourt #MemorialInMarina
    Next Story
    ×