search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பொட்டல பொருட்களின் விலையை குறைத்து விற்பனை செய்ய வேண்டும்- தமிழக அரசு அறிவிப்பு
    X

    பொட்டல பொருட்களின் விலையை குறைத்து விற்பனை செய்ய வேண்டும்- தமிழக அரசு அறிவிப்பு

    ஜி.எஸ்.டி. குறைப்பை தொடர்ந்து பொட்டல பொருட்களை விலை குறைத்து விற்பனை செய்ய வேண்டும் என்று தமிழக அரசு கூறியுள்ளது. #TNGovernment
    சென்னை:

    ஜி.எஸ்.டி. குறைப்பை தொடர்ந்து பொட்டல பொருட்களை விலை குறைத்து விற்பனை செய்ய வேண்டும் என்று தமிழக அரசு கூறியுள்ளது.

    இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-

    21.7.2018 அன்று ஜி.எஸ்.டி கவுன்சில் கூட்டம் நடைபெற்றது. அதில், முடிவு செய்யப்பட்டபடி, 27.7.2018 முதல் பெயிண்ட், வார்னிஷ், குளிர்சாதன பெட்டி, வாசிங்மிஷின், தொலைக்காட்சி பெட்டி, கிரைண்டர், மிக்ஸி, வாசனை திரவியங்கள் உள்ளிட்ட சில இனங்களுக்கு ஜி.எஸ்.டி விகிதத்தை 28, 18, 12, 5 சதவீதத்தில் இருந்து வரியைக் குறைத்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. இந்த ஜி.எஸ்.டி. குறைப்பு காரணமாக குறைக்கப்பட்ட வரி விகிதத்தின் பயனை நுகர்வோர் பெறும் வகையில், மத்திய அரசு நுகர்வோர் பாதுகாப்பு துறை (சட்டமுறை எடையளவு பிரிவு) அறிவுரை வழங்கியது.

    அதன்படி, பொட்டல பொருட்களில் ஜி.எஸ்.டி குறைப்பு காரணமாக குறைக்கப்பட வேண்டிய தொகையை பொட்டல பொருட்களில் தனியாக ஸ்டிக்கர் ஒட்டியும், முத்திரை அல்லது ஆன்லைன் பிரிண்டிங் மூலமாக அறிவிப்பு செய்ய வேண்டும். மேலும், ஏற்கனவே உள்ள அதிகபட்ச சில்லரை விற்பனை விலை அருகிலேயே புதிய ஸ்டிக்கர் ஒட்டி விற்பனை செய்ய வேண்டும் என்று உற்பத்தியாளர், பொட்டலமிடுபவர்கள், இறக்குமதி செய்து பொட்டலமிடுபவர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.



    ஜி.எஸ்.டி குறைப்பு காரணமாக குறைக்கப்பட்ட விலையில் ஸ்டிக்கர் ஒட்டி விற்பனை செய்யும் அனுமதி, இருப்பில் உள்ள விற்கப்படாத உற்பத்தி செய்யப்பட்ட அல்லது பொட்டலமிடப்பட்ட அல்லது இறக்குமதி செய்து பொட்டலமிடப்பட்ட இனங்களுக்கும் பொருந்தும். இந்த பொருட்களை 31.12.2018 வரை விற்பனை செய்ய அனுமதி வழங்கப்படுகிறது.

    மேலும், ஏற்கனவே எம்.ஆர்.பி. குறித்து ஒட்டப்பட்ட ஸ்டிக்கரில் திருத்தம் செய்யவோ, அடிக்கப்படவோ, சுரண்டப்படவோ கூடாது என்ற விவரம் தெரிவிக்கப்பட வேண்டும். ஜி.எஸ்.டி குறைப்பு காரணமாக நுகர்வோர் பயனடையும் வகையில் பொட்டல பொருட்களில் குறைக்கப்பட்ட விலையை அறிவிப்பு செய்யாத தயாரிப்பாளர்கள் மற்றும் வணிகர்கள் மீது உரிய சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

    ஜி.எஸ்.டி குறைப்பினால் பொட்டல பொருட்களின் மீது குறைக்கப்பட்ட எம்.ஆர்.பி. விலையில் விற்பனை செய்யாதது தொடர்பாக புகார்கள் ஏதுவும் இருந்தால் நுகர்வோர்கள் TN - LM-C-TS என்ற கைபேசி செயலியை (ஆப்) பதிவிறக்கம் செய்து அதன் மூலமாகவோ அல்லது செல்போன் எண் 9445398770 மூலமோ தங்கள் புகார்களைத் தெரிவிக்கலாம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. #TNGovernment
    Next Story
    ×