search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கல்லக்குடி பகுதியில் நாளை மின்சாரம் நிறுத்தம்
    X

    கல்லக்குடி பகுதியில் நாளை மின்சாரம் நிறுத்தம்

    கல்லக்குடி பகுதிகளில் பராமரிப்பு பணி நடைபெற உள்ளதால் நாளை மின்சாரம் விநியோகம் இருக்காது.

    திருச்சி:

    கல்லக்குடி துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (செவ்வாய்க்கிழமை) நடைபெற உள்ளது. இதையொட்டி நாளை காலை 9.45 மணி முதல் மாலை 4 மணி வரை கல்லக்குடி, பளிங்காநத்தம், முதுவத்தூர், வடுகர் பேட்டை, மேலரசூர், மால்வாய், சரடமங்கலம், எம். கண்ணனூர், ஓரத்தூர், சாத்தப்பாடி, ஆலங்குடி மகாஜனம், நத்தம், செம்பரை, திண்ணியம், அரியூர், திருமாங்குடி, கல்விகுடி, ஆ.மேட்டூர், விரகாலூர், குலமாணிக்கம், விளாகம், வி.சி.புரம், சங்கேந்தி, கோவண்டாகுறிச்சி, புதூர் பாளையம், குமுளூர், தச்சங்குறிச்சி, அழுந்தலைப்பூர், சிறுவயலூர், காணக்கிளியநல்லூர் ஆகிய கிராமங்களில் மின்சாரம் வினியோகம் இருக்காது.

    இந்த தகவலை தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானம் கழகத்தின் லால்குடி பகுதி செயற்பொறியாளர் தேவராஜ் வெளியிட்டு உள்ள செய்திகுறிப்பில் தெரிவித்துள்ளார்.

    Next Story
    ×