என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
தொண்டி அருகே வெடி வைத்து மீன் பிடித்ததை படம் எடுத்த மீனவர்கள் மீது தாக்குதல்
Byமாலை மலர்6 Aug 2018 11:35 AM GMT (Updated: 6 Aug 2018 11:35 AM GMT)
வெடிகளை வெடிக்கச் செய்து மீன் பிடித்ததை படம் பிடித்த மீனவர்கள் மீது தாக்குதல் நடத்தியவர்களை கடலோர காவல்படையினர் தேடி வருகின்றனர்.
தொண்டி:
ராமநாதபுரம் மாவட்டம், தொண்டி அருகே உள்ள நம்புதாளையைச் சேர்ந்த முத்துக்கிருஷ்ணன் என்பவரது பைபர் படகில் முத்துராஜா (வயது 24), செல்வம் (19), பூவரசன் (24), காளதாஸ் (18) ஆகியோர் மீன்பிடிக்கச் சென்றனர்.
அப்போது புதுக்குடியைச் சேர்ந்த ராஜ்குமரன் என்ற பெயர் கொண்ட பைபர் படகில் இருந்த சிலர் கடலில் வெடிகுண்டு வீசி மீன் பிடித்துக் கொண்டிருந்தனர்.
அதனை முத்துக்கிருஷ்ணன் படகில் 4 பேரும் செல்போனில் படம் பிடித்துள்ளனர். இதனால் வெடி வைத்து மீன் பிடிப்பதை போலீசிடம் காட்டிவிடுவார்கள் என புதுக்குடியைச் சேர்ந்த மீனவர்கள் வேகமாக வந்து நம்புதாளை மீனவர்கள் படகில் மோதி அவர்கள் வைத்திருந்த மொபைல் போன்களை கடலில் வீசி 4 மீனவர்களையும் கல், கம்பு, கம்பி போன்ற ஆயுதங்களால் தாக்கி உள்ளனர்.
மேலும் தகாத வார்த்தைகளை பேசியும் வெடிகுண்டு வீசி படகை தகர்த்து விடுவோம் என மிரட்டிச் சென்றதாக போலீசில் புகார் செய்யப்பட்டுள்ளது.
சப்-இன்ஸ்பெக்டர் காசி வழக்குப்பதிவு செய்து வெடிவைத்து மீன் பிடித்ததோடு, மீனவர்களை தாக்கிய புதுக்குடி மீனவர்களை தேடி வருகிறார்.
ராமநாதபுரம் மாவட்டம், தொண்டி அருகே உள்ள நம்புதாளையைச் சேர்ந்த முத்துக்கிருஷ்ணன் என்பவரது பைபர் படகில் முத்துராஜா (வயது 24), செல்வம் (19), பூவரசன் (24), காளதாஸ் (18) ஆகியோர் மீன்பிடிக்கச் சென்றனர்.
அப்போது புதுக்குடியைச் சேர்ந்த ராஜ்குமரன் என்ற பெயர் கொண்ட பைபர் படகில் இருந்த சிலர் கடலில் வெடிகுண்டு வீசி மீன் பிடித்துக் கொண்டிருந்தனர்.
அதனை முத்துக்கிருஷ்ணன் படகில் 4 பேரும் செல்போனில் படம் பிடித்துள்ளனர். இதனால் வெடி வைத்து மீன் பிடிப்பதை போலீசிடம் காட்டிவிடுவார்கள் என புதுக்குடியைச் சேர்ந்த மீனவர்கள் வேகமாக வந்து நம்புதாளை மீனவர்கள் படகில் மோதி அவர்கள் வைத்திருந்த மொபைல் போன்களை கடலில் வீசி 4 மீனவர்களையும் கல், கம்பு, கம்பி போன்ற ஆயுதங்களால் தாக்கி உள்ளனர்.
மேலும் தகாத வார்த்தைகளை பேசியும் வெடிகுண்டு வீசி படகை தகர்த்து விடுவோம் என மிரட்டிச் சென்றதாக போலீசில் புகார் செய்யப்பட்டுள்ளது.
சப்-இன்ஸ்பெக்டர் காசி வழக்குப்பதிவு செய்து வெடிவைத்து மீன் பிடித்ததோடு, மீனவர்களை தாக்கிய புதுக்குடி மீனவர்களை தேடி வருகிறார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X