search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பெரியகுளம் அருகே மது குடிக்க பணம் தராததால் சித்தப்பாவை தாக்கி நகை- பணம் பறிப்பு
    X

    பெரியகுளம் அருகே மது குடிக்க பணம் தராததால் சித்தப்பாவை தாக்கி நகை- பணம் பறிப்பு

    மது குடிக்க பணம் தராததால் சித்தப்பாவை தாக்கி நகை, பணத்தை பறித்த வாலிபர்களிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    தேனி:

    பெரியகுளம் அருகில் உள்ள சருத்துப்பட்டி கிழக்கு தெருவை சேர்ந்தவர் கருப்பையா (வயது40). இவரது அண்ணன் செல்வம். இவரது மகன்களான ஜெயக்குமார், உதயகுமார் ஆகிய 2 பேரும் அடிக்கடி கருப்பையாவிடம் செலவுக்கு பணம் கேட்டு தொந்தரவு செய்து வந்தனர்.

    சம்பவத்தன்று மது குடிக்க பணம் தருமாறு கருப்பையாவிடம் அவர்கள் கேட்டனர். தன்னிடம் பணம் இல்லை என கூறியதால் ஆத்திரம் அடைந்த அவர்கள் வீட்டில் இருந்த டி.வி., மின் விசிறி மற்றும் பாத்திரங்களை அடித்து நொறுக்கி சூறையாடினர்.

    மேலும் பீரோவில் இருந்த ரூ.6,500 பணத்தையும் ½ பவுன் மோதிரத்தையும் எடுத்துக்கொண்டு சென்று விட்டனர்.

    இது குறித்து தட்டிக்கேட்ட கருப்பையாவையும் தாக்கி கொலை மிரட்டல் விடுத்தனர். தென்கரை போலீஸ் நிலையத்தில் கருப்பையா கொடுத்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×