search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மன்னார்குடி அருகே ஆற்றில் தவறி விழுந்த வாலிபர் பலி
    X

    மன்னார்குடி அருகே ஆற்றில் தவறி விழுந்த வாலிபர் பலி

    மன்னார்குடி அருகே ஆற்றில் தவறி விழுந்த வாலிபர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மன்னார்குடி:

    திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே திருக்களர் கிராமத்தை சேர்ந்தவர் ரவிச்சந்திரன். இவர் ஓவர்ச்சேரி ஏ.கேஎஸ்.காலனி தெருவில் மாமனார் வீட்டில் மனைவி சித்ராவுடன் வசித்து வருகிறார். இவர்களது மகன் குரு அபிசேக் (18). மன்னார்குடி அரசு கல்லூரியில் பி.காம் முதலாம் ஆண்டு படித்து வந்தார் நேற்று வீட்டின் அருகில் உள்ள முள்ளி ஆற்றில் குளிக்க சென்ற போது தவறி விழுந்து நீரில் மூழ்கினார். அக்கம் பக்கம் உள்ளவர்கள் மீட்டு ஆதிச்ச புரம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு கொண்டு சென்றனர். அங்கு அவர் இறந்து விட்டது தெரியவந்தது.

    ரவிச்சந்திரன் கொடுத்த புகாரின் பேரில் கோட்டூர் போலீசார் உடலை மன்னார்குடி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர் இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×