என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
புதுக்கோட்டை அருகே கோவில் விழாவில் சப்-இன்ஸ்பெக்டரை தாக்கிய 4 பேர் கைது
Byமாலை மலர்5 Aug 2018 3:34 PM GMT (Updated: 5 Aug 2018 3:34 PM GMT)
புதுக்கோட்டை அருகே கருமாரியம்மன் கோவில் திருவிழாவையொட்டி இன்னிசை நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் சப் இன்ஸ்பெக்டரை தாக்கிய 4 பேரை போலீசார் கைது செய்தனர்.
அறந்தாங்கி:
புதுக்கோட்டை மாவட்டம் ஜெகதாபட்டினம் அருகே உள்ள அய்யம்பட்டினம் கருமாரியம்மன் கோவில் திருவிழாவையொட்டி நேற்றிரவு இன்னிசை நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பங்கேற்ற அப்பகுதியை சேர்ந்த முத்து (வயது 35), ரமேஷ்(23), துரை (22), பழனி(23)ஆகியோர் குடிபோதையில் ஆடிப்பாடி தகராறு செய்ததாக கூறப்படுகிறது.
இதையடுத்து அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த ஜெகதாப்பட்டினம் போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் மலையரசன் , அமைதியாக இருந்து நிகழ்ச்சியை பார்க்குமாறு தெரிவித்துள்ளார். இதில் ஆத்திரமடைந்த 4பேரும், மலையரசனை தாக்கியதோடு, அங்கு நின்ற போலீஸ் வாகனத்தின் கண்ணாடியையும் அடித்து நொறுக்கினர். இதுபற்றி மலையரசன் ஜெகதாப்பட்டினம் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் கோட்டைப்பட்டினம் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) சரவணன் வழக்குப்பதிவு செய்து 4 பேரையும் கைது செய்தார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X