search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ராமேசுவரத்தில் மீனவர் காங்கிரசார் ஆர்ப்பாட்டம்
    X

    ராமேசுவரத்தில் மீனவர் காங்கிரசார் ஆர்ப்பாட்டம்

    ராமேசுவரம் பஸ் நிலையம் பகுதியில் இந்திய மீனவர் காங்கிரஸ் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    ராமேசுவரம்:

    ராமேசுவரம் பஸ் நிலையம் பகுதியில் இந்திய மீனவர் காங்கிரஸ் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மீனவர் காங்கிரஸ் செயற்குழு உறுப்பினர் ஆம்ஸ்ட்ராங் பெர்னாண்டோ தலைமை தாங்கினார். தலைவர் பிரதாபன், செயல் தலைவர் சபாபதி, தமிழக மீனவர் காங்கிரஸ் பொறுப்பாளர் அடல்ப் மொராய்ஸ் முன்னிலை வகித்தனர்.

    தமிழக மீனவர்கள் மீது தாக்குதல் நடத்தி அச்சத்தை ஏற்படுத்தி மீனவர்களின் தொழில்களை முடுக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டு வரும் இலங்கை கடற்படையை கண்டித்தும், இலங்கை கடற்படையினரால் சிறை படிக்கப்பட்டு சேதமடைந்த தமிழக மீனவர்களின் படகிற்கு மத்திய, மாநில அரசுகள் நிவாரணம் வழங்க கோரியும் கோ‌ஷம் எழுப்பினர்.

    அகில இந்திய காங்கிரஸ் செயலாளர்கள் சபீன், போத்திராஜ், மீனவர் காங்கிரஸ் செயற்குழு உறுப்பினர் ஜோர்தான், புதுச்சேரி மீனவர் காங்கிரஸ் தலைவர் காங்கேயன், ராமேஸ்வரம் நகர தலைவர் ராஜாமணி, மாவட்ட துணை தலைவர் துல்கிப், மாவட்ட மாண வரணி தலைவர் ராஜீவ்காந்தி, இளைஞரணி தலைவர் பாபா செந்தில், ராமேசுவரம் மீனவர் சங்க தலைவர்கள் போஸ், தேவதாஸ், சேசு, சகாயம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×