search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    புழல் ஜெயிலில் கைதி தற்கொலை முயற்சி
    X

    புழல் ஜெயிலில் கைதி தற்கொலை முயற்சி

    புழல் ஜெயிலில் குடிநீர் தொட்டியின் மீது ஏறி கைதி தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
    செங்குன்றம்:

    சென்னை, பாரி முனையை சேர்ந்தவர் சுப்பிரமணி. இவரது மகன் கார்த்திக் (28). இவர்மீது பல்வேறு திருட்டு, வழிப்பறி வழக்குகள் உள்ளன. கடந்த மே மாதம் கார்த்திக்கை போலீசார் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்து புழல் ஜெயிலில் அடைத்தனர்.

    நேற்று இரவு ஜெயில் அறைக்குள் செல்லாமல் கார்த்திக் வெளியே நின்றார். இதனை சிறைக் காவலர் ஒருவர் கண்டித்து சில வார்த்தைகளால் திட்டினார்.

    இதனால் மனவேதனை அடைந்த கார்த்திக் சிறை வளாகத்தில் உள்ள குடிநீர் தொட்டியில் ஏறி தற்கொலைக்கு முயன்றார். அவர் பைப் வழியாக ஏறிய போது திடீரென வழுக்கி கீழே விழுந்தார்.

    இதில் அவரது விலா எலும்பு முறிந்தது. வலியால் அலறி துடித்த அவரை ஜெயில் சூப்பிரண்டு செந்தாமரைக் கண்ணன் மீட்டு ஸ்டான்லி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தார். அங்கு கார்த்திக்கிற்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இதுகுறித்து புழல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    Next Story
    ×