search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    வருவாய்த்துறை சான்றிதழ்களை பெற இணையதளம் மூலமாக விண்ணப்பிக்கலாம் - கலெக்டர் தகவல்
    X

    வருவாய்த்துறை சான்றிதழ்களை பெற இணையதளம் மூலமாக விண்ணப்பிக்கலாம் - கலெக்டர் தகவல்

    வருவாய்த்துறை சான்றிதழ்களை பெற இணையதளம் மூலமாக விண்ணப்பிக்கலாம் என அரியலூர் மாவட்ட கலெக்டர் விஜயலட்சுமி தெரிவித்துள்ளார்.
    அரியலூர்:

    அரியலூர் மாவட்டத்தில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை சார்பில் மின்னாளுமை திட்டத்தின் கீழ் இ-சேவை மையம் வழியாக பொதுமக்களுக்கு சாதி, வருமானம், இருப்பிடம், முதல் பட்டதாரி சான்றிதழ் மற்றும் கணவரால் கைவிடப்பட்டோர் என்பதற்கான சான்றிதழ் உள்ளிட்ட பல்வேறு வகையான சான்றுகள் தற்போது வழங்கப்பட்டு வருகிறது. 

    இந்நிலையில் இ-சேவை மையங்களில் மட்டுமில்லாமல் பொதுமக்கள் தாமாகவே ஸ்மார்ட் போன் மற்றும் இணையதளம் வழியாக சான்றிதழ்களை எந்த இடத்திலிருந்தும் விண்ணப்பிக்க வசதி செய்யப்பட்டுள்ளது. 20 வகையான வருவாய்த்துறை சான்றிதழ்களையும் www.tnes-ev-ai.tn.gov.in என்ற இணைய தளத்தில் சென்று தாமாகவே விண்ணப்பிக்கலாம். இதற்கான வழிமுறைகளை tnes-ev-ai.tn.gov.in/user-m-a-nu-al.html என்ற இணையதள முகவரியில் சென்று தெரிந்து கொள்ளலாம். 

    மேலும், மத்திய அரசின் UM-A-NG என்ற செயலியை ஆண்டிராய்டு போனில் பதிவிறக்கம் செய்து அதன் மூலம் சாதி, இருப்பிடம் மற்றும் வருமான சான்றிதழ் ஆகிய 3 சான்றிதழ்களை பெற பொதுமக்கள் விண்ணப்பிக்கலாம். சேவை கட்டணமாக ரூ.60-ஐ இணையதள வங்கி அல்லது கிரெடிட் மற்றும் டெபிட் அட்டைகள் மூலமாக செலுத்தி பொது மக்கள் அனைவரும் பயன் பெறலாம். இந்த தகவலை அரியலூர் மாவட்ட கலெக்டர் விஜயலட்சுமி வெளியிட்டுள்ள ஒரு செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.
    Next Story
    ×