search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    முதுகுளத்தூர் அருகே பள்ளியில் தண்ணீர் வசதி இல்லாததால் மாணவர்கள் அவதி
    X

    முதுகுளத்தூர் அருகே பள்ளியில் தண்ணீர் வசதி இல்லாததால் மாணவர்கள் அவதி

    முதுகுளத்தூர் அருகே பள்ளியில் தண்ணீர் வசதி இல்லாததால் மாணவர்கள் அவதி அடைந்துள்ளனர்.

    முதுகுளத்தூர்:

    முதுகுளத்தூர் அருகே தேரிருவேலி மருதகம் கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் 55 மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர்.

    இங்கு 5 ஆண்டுகளுக்கு முன்பு குடிநீர் வசதியுடன் தண்ணீர் தொட்டி அமைக்கப்பட்டது. கடந்த 6 மாதங்களாக தண்ணீர் வராததால் தொட்டி சேதமடைந்து இடிந்துள்ளது. பள்ளி குழந்தைகளின் நலன் கருதி சேதமடைந்த தொட்டி அகற்றப்பட்டது.

    தண்ணீர் வசதி இல்லாததால் பள்ளி குழந்தைகள் கழிப்பறைக்கு செல்ல சிரமப்பட்டு வருகின்றனர். இங்குள்ள ஆசிரியர்கள் தினமும் டிராக்டர்களில் விலைக்கு தண்ணீர் வாங்கி கொடுக்கிறார்கள். அதனை கழிப்பறைக்கும், புழக்கத்திற்கும் மாணவர்கள் பயன் படுத்தி வருகின்றனர்.

    ஒருசில நாட்களில் தண்ணீர் டிராக்டர் வரவில்லை என்றால் குழந்தைகள், ஆசிரியர்களும் கழிப்பறைக்கு செல்ல முடியாமல், திறந்தவெளியில் கழிப்பறைக்கு செல்லும் அவலம் உள்ளது. இதனால் பள்ளிக்கு தண்ணீர் வசதி ஏற்படுத்தி கொடுக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.

    Next Story
    ×