search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மேட்டுப்பாளையம் அருகே வேன் மோதி பெண் ஏட்டு பலி
    X

    மேட்டுப்பாளையம் அருகே வேன் மோதி பெண் ஏட்டு பலி

    கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே வேன் மோதிய விபத்தில் படுகாயமடைந்த பெண் ஏட்டு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.
    கோவை:

    கோவை மாவட்டம் அன்னூர் போலீஸ் நிலையத்தில் ஏட்டாக பணியாற்றி வந்தவர் பாக்கியம்(வயது43). இவரது கணவர் சண்முகவேலாயுதம். இவர் ராணுவத்தில் பணியாற்றி வருகிறார். இவர்களுக்கு பிரபாவதி (14) என்ற மகளும் கண்ணன்(13) என்ற மகனும் உள்ளனர்.

    இந்தநிலையில் கடந்த 30-ந்தேதி பாக்கியம் பணிநிமித்தமாக மேட்டுப்பாளையம் நீதிமன்றத்திற்கு சென்றார். பின்னர் அங்கு பணிகளை முடித்துவிட்டு தனது மொபட்டில் அன்னூர் திரும்பி கொண்டிருந்தார்.

    இதில் மேட்டுப்பாளையம் -சிறுமுகை ரோட்டில் அறிவொளிநகர் அருகே வந்த போது பின்னால் வேகமாக வந்த வேன் பாக்கியத்தின் மொபட் மீது பயங்கரமாக மோதியது. இதில் தலையில் பலத்த காயம் அடைந்த பாக்கியம் கோவையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி பாக்கியம் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து மேட்டுப்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    Next Story
    ×