என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
சேலம் அருகே ஆம்னி பஸ்சில் கடத்தப்பட்ட 18 குட்கா மூட்டைகள் பறிமுதல்
கருப்பூர்:
பெங்களுரில் இருந்த கோவைக்கு செல்லும் தனியார் ஆம்னி பஸ்சில் தடைசெய்யப்பட்ட குட்கா பொருட்கள் கடத்தி வருவதாக அழகாபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டருக்கு செந்தில்நாதனுக்கு ரகசிய தகவல் வந்தது.
இதையடுத்து இன்ஸ்பெக்டர் செந்தில் நாதன் தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர் கோவிந்தராஜ், தலைமை காவலர் பாலதண்டாயுதம் ஆகியோர் கருப்பூர் சோதனை சாவடிக்கு சென்று அங்கு வரும் வாகனங்களை சோதனை செய்தனர். அப்போது பெங்களுரில் இருந்து கோவைக்கு இரண்டு ஆம்னி பஸ்கள் வந்தது. பஸ்சை நிறுத்தி சோதனையில் ஈடுபட்டனர். அப்போது ஒரு பஸ்சில் 6 மூட்டைகளும், மற்றொரு பஸ்சில் 12 மூட்டைகளும் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. 18 குட்கா மூட்டைகளை பறிமுதல் செய்தனர்.
பின்னர் 2 பஸ் டிரைவர்களையும் பயணிகளை இறக்கி விட்டு, விட்டு காலையில் சூரமங்கலம் போலீஸ் நிலையத்தில் ஆஜராக வேண்டுமென எச்சரித்து அனுப்பி வைத்தனர்.
பறிமுதல் செய்யபட்ட குட்கா மூட்டைகளை சூரமங்கலம் போலீசில் நிலையத்தில் வைத்துள்ளனர். இதன் மதிப்பு ரூ. 2 லட்சத்து 30 ஆயிரம் ஆகும்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்