search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தமிழக அரசு, நிசான் நிறுவனம் இடையே உடன்பாடு - ஊக்கத்தொகை தர அரசு சம்மதம்
    X

    தமிழக அரசு, நிசான் நிறுவனம் இடையே உடன்பாடு - ஊக்கத்தொகை தர அரசு சம்மதம்

    ஊக்கத் தொகையை வழங்குவதற்கு தமிழக அரசு சம்மதம் தெரிவித்ததையடுத்து, அரசுக்கும் நிசான் நிறுவனத்துக்குமிடையே வழக்கில் சுமுக உடன்பாடு ஏற்பட்டுள்ளது. #NissanMotors #NissanDispute
    சென்னை:

    ஜப்பானைச் சேர்ந்த நிசான் நிறுவனம் சென்னையில் கடந்த 2008ம் ஆண்டு கார் உற்பத்தி தொழிற்சாலையை தொடங்கியது. இதற்காக தமிழக அரசுடன் ஒப்பந்தம் செய்துகொண்டது. அதன்படி நிசான் நிறுவனத்திற்கு தமிழக அரசின் சார்பில் ஊக்கத் தொகை மற்றும் வரிச்சலுகைகள் அளிக்கப்பட வேண்டும்.

    இந்நிலையில்  தமிழக அரசு ஒப்புக்கொண்டபடி ஊக்கத்தொகை மற்றும் வரிச்சலுகைகள் என மொத்தம் 5000 கோடி ரூபாய் பாக்கியை தராமல் இழுத்தடிப்பாக நிசான் நிறுவனம் கூறியது. இதுதொடர்பாக 2016-ம் ஆண்டு பிரதமருக்கு நிசான் நிறுவனம் நோட்டீசும் அனுப்பியது. பிரச்சனை முடிவுக்கு வராத நிலையில், நிசான் நிறுவனம், தமிழக அரசுக்கு எதிராக சர்வதேச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது.



    இந்த வழக்கில் தற்போது சுமுக உடன்பாடு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. 2008-ம் ஆண்டு செய்துகொண்ட ஒப்பந்தத்தின்படி நிசான் நிறுவனத்துக்கு தரவேண்டிய ஊக்கத்தொகை 2000 கோடியை மட்டும் தமிழக அரசு வழங்க சம்மதம் தெரிவித்துள்ளது.

    2019 இறுதிக்குள் 2000 கோடி ரூபாய் முழுமையாக தரப்படும் என பேச்சுவார்த்தையில் முடிவு செய்யப்பட்டுள்ளது. எனவே, இந்த விவகாரத்தில் தமிழக அரசுக்கும் நிசான் நிறுவனத்துக்கும் இடையே உடன்பாடு ஏற்பட்டுள்ளது. முதலமைச்சரின் ஒப்புதலுக்குப் பிறகு இதற்கான ஒப்பந்தம் கையெழுத்தாகும் என  தகவல் வெளியாகி உள்ளது. #NissanMotors #NissanDispute
    Next Story
    ×