search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ராஜபாளையத்தில் புது மாப்பிள்ளை தற்கொலை
    X

    ராஜபாளையத்தில் புது மாப்பிள்ளை தற்கொலை

    ராஜபாளையத்தில் புது மாப்பிள்ளை தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    ராஜபாளையம்:

    ராஜபாளையம் வடக்கு மலையடிப்பட்டியைச் சேர்ந்தவர் வினோத் கண்ணன் (வயது 29), தச்சுத் தொழிலாளி. இவருக்கும், நெல்லை மாவட்டம், புளியங்குடியைச் சேர்ந்த பானுபிரியாவுக்கும் கடந்த 9 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது.

    தச்சுத்தொழிலாளியான வினோத்கண்ணன் திருமணத்திற்கு பின்னர் சரியாக வேலைக்குச் செல்லவில்லை. மேலும் குடிப்பழக்கத்திற்கும் அடிமையானார். இதனால் வினோத்கண்ணனை அவரது மனைவியும், குடும்பத்தினரும் கண்டித்தனர்.

    இதனால் மனவேதனை அடைந்த வினோத்கண்ணன் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    இதுகுறித்து ராஜபாளையம் வடக்கு போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சப்-இன்ஸ்பெக்டர் முத்துக்குமரன் மற்றும் போலீசார் விரைந்து வந்து வினோத்கண்ணன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

    வினோத் கண்ணனின் மனைவி பானுபிரியா தற்போது 4 மாத கர்ப்பிணியாக உள்ளார்.


    Next Story
    ×