என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
ராஜபாளையத்தில் புது மாப்பிள்ளை தற்கொலை
Byமாலை மலர்2 Aug 2018 7:32 AM GMT
ராஜபாளையத்தில் புது மாப்பிள்ளை தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ராஜபாளையம்:
ராஜபாளையம் வடக்கு மலையடிப்பட்டியைச் சேர்ந்தவர் வினோத் கண்ணன் (வயது 29), தச்சுத் தொழிலாளி. இவருக்கும், நெல்லை மாவட்டம், புளியங்குடியைச் சேர்ந்த பானுபிரியாவுக்கும் கடந்த 9 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது.
தச்சுத்தொழிலாளியான வினோத்கண்ணன் திருமணத்திற்கு பின்னர் சரியாக வேலைக்குச் செல்லவில்லை. மேலும் குடிப்பழக்கத்திற்கும் அடிமையானார். இதனால் வினோத்கண்ணனை அவரது மனைவியும், குடும்பத்தினரும் கண்டித்தனர்.
இதனால் மனவேதனை அடைந்த வினோத்கண்ணன் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதுகுறித்து ராஜபாளையம் வடக்கு போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சப்-இன்ஸ்பெக்டர் முத்துக்குமரன் மற்றும் போலீசார் விரைந்து வந்து வினோத்கண்ணன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
வினோத் கண்ணனின் மனைவி பானுபிரியா தற்போது 4 மாத கர்ப்பிணியாக உள்ளார்.
ராஜபாளையம் வடக்கு மலையடிப்பட்டியைச் சேர்ந்தவர் வினோத் கண்ணன் (வயது 29), தச்சுத் தொழிலாளி. இவருக்கும், நெல்லை மாவட்டம், புளியங்குடியைச் சேர்ந்த பானுபிரியாவுக்கும் கடந்த 9 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது.
தச்சுத்தொழிலாளியான வினோத்கண்ணன் திருமணத்திற்கு பின்னர் சரியாக வேலைக்குச் செல்லவில்லை. மேலும் குடிப்பழக்கத்திற்கும் அடிமையானார். இதனால் வினோத்கண்ணனை அவரது மனைவியும், குடும்பத்தினரும் கண்டித்தனர்.
இதனால் மனவேதனை அடைந்த வினோத்கண்ணன் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதுகுறித்து ராஜபாளையம் வடக்கு போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சப்-இன்ஸ்பெக்டர் முத்துக்குமரன் மற்றும் போலீசார் விரைந்து வந்து வினோத்கண்ணன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
வினோத் கண்ணனின் மனைவி பானுபிரியா தற்போது 4 மாத கர்ப்பிணியாக உள்ளார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X