search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சிலைக் கடத்தல் வழக்குகள் சி.பி.ஐ.க்கு மாற்றம்-  அறிவிப்பாணை வெளியிட்டது தமிழக அரசு
    X

    சிலைக் கடத்தல் வழக்குகள் சி.பி.ஐ.க்கு மாற்றம்- அறிவிப்பாணை வெளியிட்டது தமிழக அரசு

    சிலைக் கடத்தல் வழக்குகளை பொன்.மாணிக்கவேல் தலைமையிலான குழுவிடம் இருந்து சி.பி.ஐ.க்கு மாற்றி தமிழக அரசு இன்று அறிவிப்பாணை வெளியிட்டுள்ளது. #IdolSmugglingCases #CBIProbe
    சென்னை:

    சிலைக் கடத்தல் வழக்குகளை விசாரித்து வரும் பொன்.மாணிக்கவேல் தலைமையிலான குழுவிற்கும் மாநில அரசுக்கும் இடையே சமீப காலமாக உரசல் போக்கு இருந்து வருகிறது. அரசிடம் இருந்து தனக்கு அழுத்தம் வருவதாகவும், உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுகளை அரசு நடைமுறைப்படுத்தவில்லை என்றும் பொன்.மாணிக்கவேல் குற்றம்சாட்டியிருந்தார். பொன்.மாணிக்கவேல் தங்களிடம் அறிக்கை தாக்கல் செய்வதில்லை என தமிழக அரசு கூறியது.

    இந்த விவகாரம் முற்றிய நிலையில், சிலை கடத்தல் வழக்குகள் அனைத்தையும் சிபிஐ வசம் ஒப்படைக்க தமிழக அரசு கொள்கை முடிவு எடுத்திருப்பதாக உயர்நீதிமன்றத்தில் நேற்று தெரிவிக்கப்பட்டது.


    இதையடுத்து அரசின் கொள்கை முடிவுகளை ஆகஸ்ட் 8-ம் தேதி நீதிமன்றத்தில் தாக்கல் செய்யும்படி தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டு விசாரணையை ஒத்திவைத்தது.

    இந்நிலையில் சிலை கடத்தல் வழக்குகளை சிபிஐ-க்கு மாற்றி தமிழக அரசு இன்று அறிவிப்பாணை வெளியிட்டுள்ளது. சிலை கடத்தலில் அயல்நாட்டவர்கள் தொடர்பு இருப்பதால் சி.பி.ஐ. போன்ற அமைப்புகள் மட்டுமே அவர்களிடம் விசாரிக்க முடியும் என்றும், சிலை கடத்தல் வழக்குகள் தொடர்பாக தமிழக எல்லைக்குள் விசாரணை நடத்திட சிபிஐ-க்கு அனுமதி அளிக்கப்படுவதாகவும் அறிவிப்பாணையில் கூறப்பட்டுள்ளது. #IdolTheftCases #IdolSmugglingCases #PonManickavel #CBIProbe
    Next Story
    ×