search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கூடலூர் அருகே சாக்கடை தகராறில் 2 பேர் மீது தாக்குதல்
    X

    கூடலூர் அருகே சாக்கடை தகராறில் 2 பேர் மீது தாக்குதல்

    கூடலூர் அருகே சாக்கடை தகராறில் 2 பேரை தாக்கிய நபர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

    தேனி:

    தேனி மாவட்டம் கூடலூர் கருணாநிதி காலனியைச் சேர்ந்தவர் ராமர் (வயது 48). அதே பகுதியைச் சேர்ந்தவர் குபேந்திரன் (42). சம்பவத்தன்று நகராட்சி துப்புரவு ஊழியர்கள் கால்வாயை தூர் வாறி அந்த குப்பையை குபேந்திரன் வீட்டு முன்பு கொட்டி விட்டனர்.

    இதற்கு ராமர்தான் காரணம் என்று நினைத்த குபேந்திரன் அவரிடம் தகராறு செய்தார். மேலும் அரிவாளால் அவரை கடுமையாக தாக்கினார். இதனை தடுக்க வந்த தாத்தப்பன் என்பவரையும் அவர் தாக்கினார்.

    படுகாயமடைந்த 2 பேரும் கம்பம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளனர். இது குறித்து ராமர் கொடுத்த புகாரின் பேரில் குபேந்திரன் மீது கூடலூர் தெற்கு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×