என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
நத்தம் வட்டார வங்கிகளில் சேமிப்பு கணக்கு புத்தகம் பற்றாக்குறை- வாடிக்கையாளர்கள் அவதி
Byமாலை மலர்2 Aug 2018 8:33 AM GMT
திண்டுக்கல் மாவட்டம் நத்தம் வட்டாரத்தில் வங்கிகளில் சேமிப்பு கணக்கு புத்தகம் இருப்பு இல்லாததால் வாடிக்கையாளர்கள் கடும் அவதிக்குள்ளாகி உள்ளனர்.
செந்துறை:
திண்டுக்கல் அருகே நத்தம் ஒன்றியத்தில் 23 ஊராட்சிகள் உள்ளன. 100-க்கும்மேற்பட்ட கிராமங்களை சேர்ந்தவர்கள், வங்கி கணக்குகளை தொடங்குவதற்காக வங்கிகளில் விண்ணப்பத்தை பூர்த்தி செய்து கொடுத்தால் ஒரு மாதத்திற்கு மேலாகியும், சேமிப்பு புத்தகம் இருப்பு இல்லை என்றும், மேலும் ஒருசில வங்கிகளில் ஊழியர்கள் பற்றாக்குறையும், சேமிப்பு கணக்கு துவங்கி கொடுப்பதில் அதிகாரிகள் அலட்சியம் காட்டுகின்றனர்.
சேமிப்பு கணக்கு தொடங்கி புத்தகம் தராததால், அரசு வழங்கும் மானியம், கல்வி உதவித்தொகை பெறுவதற்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது.
மேலும் கிராமத்தில் உள்ள படிப்பறிவு இல்லாதவர்கள், கைரேகை வைப்பவர்களும் தங்களுடைய சேமிப்பு கணக்கு புத்தகம் இருந்தால் தான் அவர்களுக்கு தங்களது கணக்கில் எவ்வளவு இருப்பு பணம் இருக்கிறது என்று கேட்டு தெரிய முடியும். படித்தவர்கள் ஏடிஎம் எந்திரத்தில் போய் பார்த்து கொள்கின்றனர்.
ஆனால் கிராமத்தில் உள்ள படிப்பறிவு இல்லாதவர்கள், கைரேகை வைப்பவர்களுக்கு இந்த சேமிப்பு புத்தகம் இருந்தால் மட்டுமே அருகில் உள்ளவர்களையும், வங்கி ஊழியர்களிடம் கேட்டு தெரிந்து கொள்ளும் நிலமை உள்ளது.
தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகள் தங்களுடைய வாடிக்கையாளர்களுக்கு வேண்டிய உதவிகளை செய்தால் அவர்கள் வீன்அலைச்சலும், மன உளைச்சலும் இல்லாமல் அவர்கள் உங்களுடைய உதவியை நாடி பலர் வங்கி கணக்கு தொடங்கவும், பணத்தை வங்கியில் தொடர்வைப்புக்கு வழி வகுக்கும், அப்போது தான் வங்கி மீது நம்பிக்கைக்கு ஏதுவாக இருக்கும் என்பதே சமூக ஆர்வலர்களின் கருத்தாக உள்ளது.
திண்டுக்கல் அருகே நத்தம் ஒன்றியத்தில் 23 ஊராட்சிகள் உள்ளன. 100-க்கும்மேற்பட்ட கிராமங்களை சேர்ந்தவர்கள், வங்கி கணக்குகளை தொடங்குவதற்காக வங்கிகளில் விண்ணப்பத்தை பூர்த்தி செய்து கொடுத்தால் ஒரு மாதத்திற்கு மேலாகியும், சேமிப்பு புத்தகம் இருப்பு இல்லை என்றும், மேலும் ஒருசில வங்கிகளில் ஊழியர்கள் பற்றாக்குறையும், சேமிப்பு கணக்கு துவங்கி கொடுப்பதில் அதிகாரிகள் அலட்சியம் காட்டுகின்றனர்.
சேமிப்பு கணக்கு தொடங்கி புத்தகம் தராததால், அரசு வழங்கும் மானியம், கல்வி உதவித்தொகை பெறுவதற்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது.
மேலும் கிராமத்தில் உள்ள படிப்பறிவு இல்லாதவர்கள், கைரேகை வைப்பவர்களும் தங்களுடைய சேமிப்பு கணக்கு புத்தகம் இருந்தால் தான் அவர்களுக்கு தங்களது கணக்கில் எவ்வளவு இருப்பு பணம் இருக்கிறது என்று கேட்டு தெரிய முடியும். படித்தவர்கள் ஏடிஎம் எந்திரத்தில் போய் பார்த்து கொள்கின்றனர்.
ஆனால் கிராமத்தில் உள்ள படிப்பறிவு இல்லாதவர்கள், கைரேகை வைப்பவர்களுக்கு இந்த சேமிப்பு புத்தகம் இருந்தால் மட்டுமே அருகில் உள்ளவர்களையும், வங்கி ஊழியர்களிடம் கேட்டு தெரிந்து கொள்ளும் நிலமை உள்ளது.
தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகள் தங்களுடைய வாடிக்கையாளர்களுக்கு வேண்டிய உதவிகளை செய்தால் அவர்கள் வீன்அலைச்சலும், மன உளைச்சலும் இல்லாமல் அவர்கள் உங்களுடைய உதவியை நாடி பலர் வங்கி கணக்கு தொடங்கவும், பணத்தை வங்கியில் தொடர்வைப்புக்கு வழி வகுக்கும், அப்போது தான் வங்கி மீது நம்பிக்கைக்கு ஏதுவாக இருக்கும் என்பதே சமூக ஆர்வலர்களின் கருத்தாக உள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X