search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சாலை விபத்தில் இறந்த 6 பேரின் குடும்பத்துக்கு தலா ரூ.1 லட்சம்- எடப்பாடி பழனிசாமி உத்தரவு
    X

    சாலை விபத்தில் இறந்த 6 பேரின் குடும்பத்துக்கு தலா ரூ.1 லட்சம்- எடப்பாடி பழனிசாமி உத்தரவு

    கோவை சுந்தராபுரத்தில் நடந்த சாலை விபத்தில் உயிரிழந்த 6 பேரின் குடும்பத்துக்கு தலா ரூ.1 லட்சம் வழங்க எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். #EdappadiPalanisamy #ADMK
    சென்னை:

    முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    கோவை மதுக்கரை வட்டம், சுந்தராபுரத்தில் கடந்த 1-ந்தேதி பொள்ளாச்சியிலிருந்து கோவை நோக்கி வந்துகொண்டிருந்த கார், சுந்தராபுரம் நான்கு வழிச்சாலையில் நிலைதடுமாறி சாலையோரத்தில் நின்றுகொண்டிருந்த ஆட்டோ மீது மோதியது.

    இதில், ஆட்டோவில் பயணம் செய்த 3 பயணிகள் மற்றும் சாலையோரம் நின்றிருந்த கல்லூரி மாணவிகள் உள்பட 6 நபர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர் என்ற செய்தியை அறிந்து நான் மிகவும் துயரம் அடைந்தேன். இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபத்தையும் தெரிவித்துக்கொள்கிறேன்.



    இந்த விபத்தில் காயமடைந்த 3 நபர்களுக்கு நல்ல முறையில் சிகிச்சை அளிக்க மாவட்ட நிர்வாகத்திற்கும், மருத்துவமனை அதிகாரிகளுக்கும் நான் உத்தரவிட்டுள்ளேன். இவர்கள் அனைவரும் விரைவில் பூரண குணமடைந்து வீடுதிரும்ப வேண்டும் என்ற எனது விருப்பத்தை தெரிவித்துக்கொள்கிறேன்.

    இந்த துயர சம்பவத்தில் உயிரிழந்த 6 நபர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.1 லட்சமும், பலத்த காயமடைந்தவர்களுக்கு தலா ரூ.50 ஆயிரமும், சாதாரண காயமடைந்தவர்களுக்கு தலா ரூ.25 ஆயிரமும் முதல்-அமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்க உத்தரவிட்டுள்ளேன்.

    இவ்வாறு அவர் கூறி உள்ளார். #EdappadiPalanisamy #ADMK
    Next Story
    ×