search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    நாசரேத் அருகே விவசாயிக்கு கொலை மிரட்டல்- வாலிபர் கைது
    X

    நாசரேத் அருகே விவசாயிக்கு கொலை மிரட்டல்- வாலிபர் கைது

    இரும்பு வேலியை சேதப்படுத்தியதை கண்டித்தால் விவசாயிக்கு கொலை மிரட்டல் விடுத்த வாலிபர் கைது செய்யப்பட்டார்.
    நாசரேத்:

    நாசரேத் அருகே உள்ள கொமந்தான்நகரை சேர்ந்தவர் ஆறுமுகநயினார் (வயது 58) விவசாயி. இவருக்கு சொந்தமான நிலம் நாசரேத் அருகே உள்ள சுப்பிரமணியபுரத்தில் உள்ளது. இவர் அடிக்கடி அங்கு சென்று வருவார். 

     இந்த நிலையில் கடந்த 29-ம் தேதி ஆறுமுகநயினார் சுப்பிரமணியபுரத்தில் உள்ள தனது இடத்தில் நின்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த அதே பகுதியை சேர்ந்த ஜெபராஜ் (20) என்பவர் ஆறுமுகநயினார் இடத்தை சுற்றி அமைக்கப்பட்ட இரும்பு வேலியை சேதப்படுத்தியதாக கூறப்படுகிறது.  

    இதனை ஆறுமுகநயினார் கண்டித்தார். இதனால் ஆத்திரமடைந்த ஜெபராஜ், ஆறுமுகநயினாரை தாக்கி கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து ஆறுமுகநயினார் நாசரேத் போலீசில் புகார் செய்தார். போலீசார் வாலிபரை கைது செய்தனர்.
    Next Story
    ×