search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ராயப்பேட்டையில் போலீசை தாக்கிய 8 பேர் மீது குண்டர் சட்டம்
    X

    ராயப்பேட்டையில் போலீசை தாக்கிய 8 பேர் மீது குண்டர் சட்டம்

    சென்னை ராயப்பேட்டையில் போலீஸ் மீது தாக்குதல் நடத்திய 8 ரவுடிகள் மீதும் குண்டர் சட்டம் பாய்ந்தது.
    சென்னை:

    ராயப்பேட்டையில் சாலையில் அமர்ந்து குடிபோதையில் ரகளையில் ஈடுபட்ட ரவுடிகளை பிடிக்க போலீஸ்காரர் ஏழுமலை சென்றபோது அவரை பயங்கர ஆயுதங்களால் அந்த கும்பல் தாக்கியது.

    படுகாயத்துடன் உயிர் தப்பி வந்த போலீஸ்காரர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உயிர் பிழைத்தார். கடந்த மாதம் 3-ந்தேதி நடந்த இந்த சம்பவத்தில் தொடர்புடைய ரவுடிகளை பிடிக்க போலீஸ் படை சென்றது. அப்போது நடத்திய துப்பாக்கி சூட்டில் ரவுடி ஆனந்த் கொல்லப்பட்டார்.

    அதையடுத்து அவனது கூட்டாளிகள் அரவிந்த், அருண், வேல்முருகன், ஸ்ரீதர், அஜித்குமார், சுந்தர், அப்பு, அமுதன் ஆகிய 8 பேர் கைது செய்யப்பட்டனர். போலீசை தாக்கிய 8 பேரையும் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்ய போலீஸ் கமி‌ஷனர் ஏ.கே. விஸ்வநாதன் உத்தரவிட்டார். இதைத் தொடர்ந்து ரவுடிகள் 8 பேர் மீதும் குண்டர் சட்டம் பாய்ந்தது.

    இதேபோல சென்னையில் பல்வேறு குற்ற சம்பவங்களில் ஈடுபட்ட 15 பேரும் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டனர்.
    Next Story
    ×