என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
சுதந்திர தினவிழா - கரூரில் முன்னேற்பாடு பணிகள் தீவிரம்
Byமாலை மலர்1 Aug 2018 12:10 PM GMT (Updated: 1 Aug 2018 12:10 PM GMT)
கரூர் மாவட்டத்தில் சுதந்திர தினவிழா முன்னேற்பாடு பணிகள் குறித்து கலெக்டர் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடந்தது.
கரூர்:
கரூர் தாந்தோன்றிமலை பகுதியிலுள்ள மாவட்ட விளையாட்டரங்கில் வருகிற 15-ந் தேதி சுதந்திர தின விழா கொண்டாடப்படுகிறது. இது தொடர்பாக முன்னேற்பாடு பணிகள் குறித்த ஆலோசனை கூட்டம் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் மாவட்ட கலெக்டர் அன்பழகன் தலைமையில் நடந்தது. இதில் கலெக்டர் பேசியதாவது:-
இந்திய திருநாட்டின் சுதந்திர தினத்தை கொண்டாடும் அதே வேளையில், சுதந்திரத்திற்காக பாடுபட்ட தியாகிகளுக்கு கவுரவம் செய்யும் வகையில் அவர்களுக்கு பொன்னாடை அணிவித்து, சிறப்புசெய்யும் நடவடிக்கைகளை மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) மேற்கொள்ள வேண்டும்.
விழா நடைபெறும் மைதானத்தை தூய்மைப்படுத்திடவும், விழா நாளில் வருகை தரும் அனைவருக்கும் போதிய குடிநீர் மற்றும் கழிப்பறை வசதிகளை மேற்கொள்ளவும் கரூர் நகராட்சி ஆணையர் உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
அணிவகுப்பு மற்றும் கலை நிகழ்ச்சிகளில் பங்குபெறும் மாணவ- மாணவிகளுக்கு உரிய சிற்றுண்டிகள் வழங்கப்பட வேண்டும். விழா நடைபெறும் நாளில் தீ தடுப்பு நடவடிக்கையாக தீயணைப்பு வாகனத்தை மைதானத்திற்கு அருகில் தயார்நிலையில் வைத்திடவும், உரிய மருந்து பொருட்களுடன் நடமாடும் மருத்துவ குழுக்களும், 108 வாகனமும் இருக்கும் வகையில் சம்பந்தப்பட்ட துறையினர் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
விழா நடைபெறும் மைதானத்திற்கு பொதுமக்கள், பள்ளி மாணவ- மாணவிகள் வந்து செல்ல ஏதுவாக கரூர் பஸ் நிலையத்திலிருந்து மாவட்ட விளையாட்டு மைதானம் வரை பஸ்களை கூடுதலாக இயக்கிட போக்குவரத்து துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும். போலீஸ்துறையினர் ஆங்காங்கே ரோந்து பணியில் ஈடுபட்டு பாதுகாப்பினையும் பலப்படுத்த வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
கரூர் தாந்தோன்றிமலை பகுதியிலுள்ள மாவட்ட விளையாட்டரங்கில் வருகிற 15-ந் தேதி சுதந்திர தின விழா கொண்டாடப்படுகிறது. இது தொடர்பாக முன்னேற்பாடு பணிகள் குறித்த ஆலோசனை கூட்டம் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் மாவட்ட கலெக்டர் அன்பழகன் தலைமையில் நடந்தது. இதில் கலெக்டர் பேசியதாவது:-
இந்திய திருநாட்டின் சுதந்திர தினத்தை கொண்டாடும் அதே வேளையில், சுதந்திரத்திற்காக பாடுபட்ட தியாகிகளுக்கு கவுரவம் செய்யும் வகையில் அவர்களுக்கு பொன்னாடை அணிவித்து, சிறப்புசெய்யும் நடவடிக்கைகளை மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) மேற்கொள்ள வேண்டும்.
விழா நடைபெறும் மைதானத்தை தூய்மைப்படுத்திடவும், விழா நாளில் வருகை தரும் அனைவருக்கும் போதிய குடிநீர் மற்றும் கழிப்பறை வசதிகளை மேற்கொள்ளவும் கரூர் நகராட்சி ஆணையர் உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
அணிவகுப்பு மற்றும் கலை நிகழ்ச்சிகளில் பங்குபெறும் மாணவ- மாணவிகளுக்கு உரிய சிற்றுண்டிகள் வழங்கப்பட வேண்டும். விழா நடைபெறும் நாளில் தீ தடுப்பு நடவடிக்கையாக தீயணைப்பு வாகனத்தை மைதானத்திற்கு அருகில் தயார்நிலையில் வைத்திடவும், உரிய மருந்து பொருட்களுடன் நடமாடும் மருத்துவ குழுக்களும், 108 வாகனமும் இருக்கும் வகையில் சம்பந்தப்பட்ட துறையினர் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
விழா நடைபெறும் மைதானத்திற்கு பொதுமக்கள், பள்ளி மாணவ- மாணவிகள் வந்து செல்ல ஏதுவாக கரூர் பஸ் நிலையத்திலிருந்து மாவட்ட விளையாட்டு மைதானம் வரை பஸ்களை கூடுதலாக இயக்கிட போக்குவரத்து துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும். போலீஸ்துறையினர் ஆங்காங்கே ரோந்து பணியில் ஈடுபட்டு பாதுகாப்பினையும் பலப்படுத்த வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X