search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    புதுக்கோட்டை மாவட்டம் காளான் வளர்ப்பு பயிற்சி
    X

    புதுக்கோட்டை மாவட்டம் காளான் வளர்ப்பு பயிற்சி

    புதுக்கோட்டை மாவட்டம் வம்பன் வேளாண்மை அறிவியல் நிலையத்தில் காளான் வளர்ப்பு தொழில் நுட்பம் குறித்த பயிற்சி நடைபெற்றது.

    திருவரங்குளம்:

    புதுக்கோட்டை மாவட்டம் வம்பன் வேளாண்மை அறிவியல் நிலையத்தில் காளான் வளர்ப்பு தொழில் நுட்பம் குறித்த பயிற்சி நடைபெற்றது.

    பயிற்சியினை திட்ட ஒருங்கிணைப்பாளர் லதா தலைமையேற்று தொடங்கி வைத்து காளான் வளர்ப்பு முறை குறித்தும் காளானில் மதிப்பு கூட்டுதல் மற்றும் சந்தை படுத்துதல் பற்றி எடுத்துரைத்தார்.

    அதனைத் தொடர்ந்து பயிற்சி உதவியாளர் சண்முக பாக்கியம் காளான் வளர்ப்பு முறை குறித்து விவசாயிகளுக்கு நேரடி செயல் விளக்கம் அளித்தார்.

    உதவி பேராசிரியர் பிரபு குமார், தனலட்சுமி, புதுக்கோட்டை, மிரட்டு நிலை, மறமடக்கி, தோப்புக் கொள்ளை, கீழத்தூர், வடகாடு மற்றும் பரவக்கோட்டை ஆகிய பகுதிகளிலிருந்து 27 பெண்கள் உட்பட 41 விவசாயிகள் கலந்துகொண்டனர். #Tamilnews

    Next Story
    ×