என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
திருமண ஆசை காட்டி பெண்ணிடம் நகை-ரூ.80 ஆயிரம் மோசடி- போலீஸ்காரர் கைது
Byமாலை மலர்1 Aug 2018 9:53 AM GMT (Updated: 1 Aug 2018 9:53 AM GMT)
பெண்ணிடம் திருமண ஆசைகாட்டி 1 பவுன் தங்கம் மற்றும் ரூ.80 ஆயிரம் மோசடி செய்து கொலை மிரட்டல் விடுத்ததாக சஸ்பெண்டு போலீஸ்காரர் கைது செய்யப்பட்டார்.
ராமநாதபுரம்:
ராமநாதபுரம் அருகே உள்ள சக்கரக்கோட்டை மேல சோத்தூரணி கிராமத்தைச் சேர்ந்த ராமு மகள் பஞ்சவர்ணம் (வயது 33), அனைத்து மகளிர் போலீசில் புகார் மனு கொடுத்துள்ளார். அதில் எனக்கும், முனியாண்டி மகன் ராஜ்குமார் (30) என்பவருக்கும் காதல் ஏற்பட்டது.
என்னை திருமணம் செய்வதாக அவர் கூறினார். இதனை நம்பி 1 பவுன் நகை, ரூ.80 ஆயிரம் கொடுத்தேன். ஆனால் தற்போது திருமணம் செய்ய மறுப்பதோடு கொலை மிரட்டலும் விடுக்கிறார். அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.
இது குறித்து இன்ஸ்பெக்டர் (பொ) கலாராணி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார். தொடர்ந்து ராஜ்குமார் கைது செய்யப்பட்டார். இவர் டெல்லி 8-வது பட்டாலியனில் போலீஸ்காரராக பணியாற்றி சஸ்பெண்டு ஆனவர் என்பது குறிப்பிடத்தக்கது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X