search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    திருமண ஆசை காட்டி பெண்ணிடம் நகை-ரூ.80 ஆயிரம் மோசடி- போலீஸ்காரர் கைது
    X

    திருமண ஆசை காட்டி பெண்ணிடம் நகை-ரூ.80 ஆயிரம் மோசடி- போலீஸ்காரர் கைது

    பெண்ணிடம் திருமண ஆசைகாட்டி 1 பவுன் தங்கம் மற்றும் ரூ.80 ஆயிரம் மோசடி செய்து கொலை மிரட்டல் விடுத்ததாக சஸ்பெண்டு போலீஸ்காரர் கைது செய்யப்பட்டார்.

    ராமநாதபுரம்:

    ராமநாதபுரம் அருகே உள்ள சக்கரக்கோட்டை மேல சோத்தூரணி கிராமத்தைச் சேர்ந்த ராமு மகள் பஞ்சவர்ணம் (வயது 33), அனைத்து மகளிர் போலீசில் புகார் மனு கொடுத்துள்ளார். அதில் எனக்கும், முனியாண்டி மகன் ராஜ்குமார் (30) என்பவருக்கும் காதல் ஏற்பட்டது.

    என்னை திருமணம் செய்வதாக அவர் கூறினார். இதனை நம்பி 1 பவுன் நகை, ரூ.80 ஆயிரம் கொடுத்தேன். ஆனால் தற்போது திருமணம் செய்ய மறுப்பதோடு கொலை மிரட்டலும் விடுக்கிறார். அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.

    இது குறித்து இன்ஸ்பெக்டர் (பொ) கலாராணி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார். தொடர்ந்து ராஜ்குமார் கைது செய்யப்பட்டார். இவர் டெல்லி 8-வது பட்டாலியனில் போலீஸ்காரராக பணியாற்றி சஸ்பெண்டு ஆனவர் என்பது குறிப்பிடத்தக்கது.

    Next Story
    ×