என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
அமைச்சர் ஓ.எஸ்.மணியன் ஆதரவாளர் கொலை: அ.தி.மு.க. செயலாளர்- ம.தி.மு.க. பிரமுகர் கைது
Byமாலை மலர்1 Aug 2018 9:40 AM GMT (Updated: 1 Aug 2018 9:40 AM GMT)
அமைச்சர் ஓ.எஸ்.மணியன் ஆதரவாளர் கொலையில் அ.தி.மு.க. செயலாளர் மற்றும் ம.தி.மு.க. பிரமுகர் கைதான சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சீர்காழி:
நாகை மாவட்டம் சீர்காழி பகுதியை சேர்ந்தவர் ரமேஷ்பாபு (வயது 47). முதல் நிலை காண்டிராக்டராக இருந்து வந்தார். மேலும் கொள்ளிடம் ஒன்றிய அ.தி.மு.க. மாணவரணி துணை செயலாளராக பதவி வகித்தார். இவர் அமைச்சர் ஓ.எஸ்.மணியனின் தீவிர ஆதரவாளர் ஆவார்.
இந்நிலையில் கடந்த 23-ந் தேதி காலை தனது காரில் சீர்காழி பிடாரி வடக்கு வீதியில் உள்ள தனியார் பஸ் உரிமையாளரை சந்தித்து விட்டு அவரது வீட்டு வாசலில் காரில் அமர்ந்து இருந்தார். அப்போது காரில் வந்த மர்ம கும்பல் நாட்டு வெடிகுண்டுகளை வீசியும், அரிவாளால் வெட்டியும் ரமேஷ்பாபுவை படுகொலை செய்தனர். அமைச்சர் ஓ.எஸ்.மணியனின் ஆதரவாளர் ரமேஷ்பாபு படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்நிலையில் அ.தி.மு.க. பிரமுகர் கொலை குறித்து விசாரிக்க தஞ்சை சரக டி.ஐ.ஜி. லோகநாதன் உத்தரவின் பேரில் 4 தனிப்படைகள் அமைக்கப்பட்டு தீவிர விசாரணை நடந்து வந்தது.
இந்த நிலையில் ரமேஷ் பாபுவை கொலை செய்ததாக கூலிப்படையை சேர்ந்த சீர்காழியை சேர்ந்த பார்த்திபன், கட்டை பிரபு, பிரேம்நாத் ஆகியோர் சேலம் கோர்ட்டில் சரண் அடைந்தனர். இதனை அறிந்த தனிப்படை போலீசார் மற்றும் புதுப்பட்டினம் இன்ஸ்பெக்டர் முருகேசன் ஆகியோர் கடந்த 27-ந் தேதி 3 பேரையும் சீர்காழிக்கு அழைத்து வந்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி பின்னர் 5 நாள் போலீஸ் காவலில் எடுத்து தீவிர விசாரணை நடத்தினர்.
இதற்கிடையே ரமேஷ்பாபு கொலை தொடர்பாக கூலிப்படையை சேர்ந்த கார் டிரைவர் கிருஷ்ணகிரியை சேர்ந்த தமிழரசன் என்பவர் திருச்சி கோர்ட்டில் சரண் அடைந்தார். இந்த நிலையில் நாகை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு விஜயகுமார் சீர்காழிக்கு வந்து விசாரணை நடத்தினார். அ.தி.மு.க. பிரமுகர் ரமேஷ்பாபு கொலை செய்யப்பட்ட பிடாரி வடக்கு தெருவுக்கு சென்று விசாரணை நடத்தினார்.
இதற்கிடையே கூலிப்படையை சேர்ந்த பார்த்திபன், கட்டை பிரபு, பிரேம்நாத் ஆகியோரை காவலில் எடுத்து தனிப்படை போலீசார் விசாரித்தனர்.
அப்போது ரமேஷ்பாபு கொலையில் கொள்ளிடம் ஒன்றிய அ.தி.மு.க. செயலாளர் ஜெயராமன் (55) மற்றும் ம.தி.மு.க. மாநில இளைஞரணி துணை செயலாளர் மார்க்கோனி (47) ஆகியோர் தொடர்பு இருந்தது தெரிய வந்தது.
இதையடுத்து அ.தி.மு.க. ஒன்றிய செயலாளர் ஜெயராமன், ம.தி.மு.க. பிரமுகர் மார்க்கோனி ஆகிய 2 பேரையும் நேற்று இரவு தனிப்படை போலீசார் கைது செய்தனர். போலீஸ் டி.எஸ்.பி.க்கள் சீர்காழி சேகர், மயிலாடுதுறை வெங்கடேசன், இன்ஸ்பெக்டர்கள் சீர்காழி சிங்காரவேலு, பொறையாறு செல்வம், கொள்ளிடம் முனிசேகர் ஆகியோர் கைது செய்து சீர்காழி குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதி சிவராஜ் இல்லத்துக்கு ஜெயராமன், மார்க்கோனி ஆகியோரை ஆஜர்படுத்தினர். அவர்கள் 2 பேரையும் 15 நாள் காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார்.
இதையடுத்து 2 பேரும் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் திருச்சி மத்திய சிறைக்கு கொண்டு சென்று அடைக்கப்பட்டனர்.
அ.தி.மு.க. பிரமுகர் ரமேஷ்பாபு கொலைக்கு தொழில் போட்டி மற்றும் அரசியல் போட்டியே காரணம் என தெரிய வந்துள்ளது.
ரமேஷ்பாபு குறுகிய காலத்திலேயே அமைச்சர் ஓ.எஸ்.மணியனின் ஆதரவாளர் ஆனார். இந்த செல்வாக்கை பயன்படுத்தி மணல் குவாரி, மற்றும் பல்வேறு ஒப்பந்த பணிகளை காண்டிராக்ட் எடுத்து கோடிக்கணக்கில் சம்பாதித்தார். இதனால் அவர் மீது பலருக்கு பொறாமையும், போட்டியும் ஏற்பட்டது. இதன் காரணமாக அவர் படுகொலை செய்யப்பட்டது தனிப்படை போலீசார் விசாரணையில் தெரிய வந்தது. இந்த கொலை வழக்கில் மேலும் சிலரை போலீசார் தேடி வருகின்றனர்.
அ.தி.மு.க. பிரமுகர் கொலையில் அ.தி.மு.க. செயலாளர் மற்றும் ம.தி.மு.க. பிரமுகர் கைதான சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நாகை மாவட்டம் சீர்காழி பகுதியை சேர்ந்தவர் ரமேஷ்பாபு (வயது 47). முதல் நிலை காண்டிராக்டராக இருந்து வந்தார். மேலும் கொள்ளிடம் ஒன்றிய அ.தி.மு.க. மாணவரணி துணை செயலாளராக பதவி வகித்தார். இவர் அமைச்சர் ஓ.எஸ்.மணியனின் தீவிர ஆதரவாளர் ஆவார்.
இந்நிலையில் கடந்த 23-ந் தேதி காலை தனது காரில் சீர்காழி பிடாரி வடக்கு வீதியில் உள்ள தனியார் பஸ் உரிமையாளரை சந்தித்து விட்டு அவரது வீட்டு வாசலில் காரில் அமர்ந்து இருந்தார். அப்போது காரில் வந்த மர்ம கும்பல் நாட்டு வெடிகுண்டுகளை வீசியும், அரிவாளால் வெட்டியும் ரமேஷ்பாபுவை படுகொலை செய்தனர். அமைச்சர் ஓ.எஸ்.மணியனின் ஆதரவாளர் ரமேஷ்பாபு படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்நிலையில் அ.தி.மு.க. பிரமுகர் கொலை குறித்து விசாரிக்க தஞ்சை சரக டி.ஐ.ஜி. லோகநாதன் உத்தரவின் பேரில் 4 தனிப்படைகள் அமைக்கப்பட்டு தீவிர விசாரணை நடந்து வந்தது.
இந்த நிலையில் ரமேஷ் பாபுவை கொலை செய்ததாக கூலிப்படையை சேர்ந்த சீர்காழியை சேர்ந்த பார்த்திபன், கட்டை பிரபு, பிரேம்நாத் ஆகியோர் சேலம் கோர்ட்டில் சரண் அடைந்தனர். இதனை அறிந்த தனிப்படை போலீசார் மற்றும் புதுப்பட்டினம் இன்ஸ்பெக்டர் முருகேசன் ஆகியோர் கடந்த 27-ந் தேதி 3 பேரையும் சீர்காழிக்கு அழைத்து வந்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி பின்னர் 5 நாள் போலீஸ் காவலில் எடுத்து தீவிர விசாரணை நடத்தினர்.
இதற்கிடையே ரமேஷ்பாபு கொலை தொடர்பாக கூலிப்படையை சேர்ந்த கார் டிரைவர் கிருஷ்ணகிரியை சேர்ந்த தமிழரசன் என்பவர் திருச்சி கோர்ட்டில் சரண் அடைந்தார். இந்த நிலையில் நாகை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு விஜயகுமார் சீர்காழிக்கு வந்து விசாரணை நடத்தினார். அ.தி.மு.க. பிரமுகர் ரமேஷ்பாபு கொலை செய்யப்பட்ட பிடாரி வடக்கு தெருவுக்கு சென்று விசாரணை நடத்தினார்.
இதற்கிடையே கூலிப்படையை சேர்ந்த பார்த்திபன், கட்டை பிரபு, பிரேம்நாத் ஆகியோரை காவலில் எடுத்து தனிப்படை போலீசார் விசாரித்தனர்.
அப்போது ரமேஷ்பாபு கொலையில் கொள்ளிடம் ஒன்றிய அ.தி.மு.க. செயலாளர் ஜெயராமன் (55) மற்றும் ம.தி.மு.க. மாநில இளைஞரணி துணை செயலாளர் மார்க்கோனி (47) ஆகியோர் தொடர்பு இருந்தது தெரிய வந்தது.
இதையடுத்து அ.தி.மு.க. ஒன்றிய செயலாளர் ஜெயராமன், ம.தி.மு.க. பிரமுகர் மார்க்கோனி ஆகிய 2 பேரையும் நேற்று இரவு தனிப்படை போலீசார் கைது செய்தனர். போலீஸ் டி.எஸ்.பி.க்கள் சீர்காழி சேகர், மயிலாடுதுறை வெங்கடேசன், இன்ஸ்பெக்டர்கள் சீர்காழி சிங்காரவேலு, பொறையாறு செல்வம், கொள்ளிடம் முனிசேகர் ஆகியோர் கைது செய்து சீர்காழி குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதி சிவராஜ் இல்லத்துக்கு ஜெயராமன், மார்க்கோனி ஆகியோரை ஆஜர்படுத்தினர். அவர்கள் 2 பேரையும் 15 நாள் காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார்.
இதையடுத்து 2 பேரும் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் திருச்சி மத்திய சிறைக்கு கொண்டு சென்று அடைக்கப்பட்டனர்.
அ.தி.மு.க. பிரமுகர் ரமேஷ்பாபு கொலைக்கு தொழில் போட்டி மற்றும் அரசியல் போட்டியே காரணம் என தெரிய வந்துள்ளது.
ரமேஷ்பாபு குறுகிய காலத்திலேயே அமைச்சர் ஓ.எஸ்.மணியனின் ஆதரவாளர் ஆனார். இந்த செல்வாக்கை பயன்படுத்தி மணல் குவாரி, மற்றும் பல்வேறு ஒப்பந்த பணிகளை காண்டிராக்ட் எடுத்து கோடிக்கணக்கில் சம்பாதித்தார். இதனால் அவர் மீது பலருக்கு பொறாமையும், போட்டியும் ஏற்பட்டது. இதன் காரணமாக அவர் படுகொலை செய்யப்பட்டது தனிப்படை போலீசார் விசாரணையில் தெரிய வந்தது. இந்த கொலை வழக்கில் மேலும் சிலரை போலீசார் தேடி வருகின்றனர்.
அ.தி.மு.க. பிரமுகர் கொலையில் அ.தி.மு.க. செயலாளர் மற்றும் ம.தி.மு.க. பிரமுகர் கைதான சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X