என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
அம்பத்தூர் பகுதியில் மோட்டார் சைக்கிளில் வந்து காணும் பொருட்களை எல்லாம் திருடிச் செல்லும் வாலிபர்கள்
சென்னை:
சென்னையில் மோட்டார் சைக்கிளில் வந்து வழிப்பறிகளில் ஈடுபடுவது அதிகரித்து வருகிறது. குறிப்பாக தனியாக நடந்து செல்லும் பெண்களை குறிவைத்து கைவரிசை காட்டுகிறார்கள்.
செயின் பறிப்பில் ஈடுபட்டால் சில இடங்களில் மாட்டிக் கொள்வது, பொது மக்கள் துரத்துவதும் உண்டு.
அதற்காக இப்போது நூதன முறைகளில் திருட தொடங்கி இருக்கிறார்கள். அம்பத்தூர் கள்ளிக்குப்பம் பகுதியில் வீடுகளின் முன்பு நிறுத்தப்பட்டிருக்கும் சைக்கிள்கள், மோட்டார் சைக்கிள்கள் மற்றும் பாத்திரங்களையும் எடுத்து சென்று விடுகிறார்கள்.
கிடைத்தவரை லாபம் என்ற எண்ணத்தில் கண்ணில் தென்படும் பொருட்களை எல்லாம் திருடுகிறார்கள். அதனால் வெளியே எந்த பொருளையும் வைக்க முடியாமல் திணறுகிறார்கள்.
நேற்று இரண்டு வாலிபர்கள் மோட்டார் சைக்கிளில் சுற்றி கொண்டிருந்ததும் பின்னர் ஒரு வீட்டின் முன்பு நிறுத்தப்பட்டிருந்த சைக்கிளை தூக்கி செல்வதும் அந்த தெருவில் உள்ள ஒரு கண்காணிப்பு கேமிராவில் பதிவாகி உள்ளது.
அந்த வீடியோ பதிவுடன் இன்று அம்பத்தூர் போலீசில் புகார் செய்துள்ளனர். அதை வைத்து போலீசார் துப்பு துலக்கி வருகிறார்கள்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்