என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
கனிமொழி எம்.பி. பெயரில் போலி டுவிட்டர் பக்கம்
Byமாலை மலர்31 July 2018 8:27 PM GMT (Updated: 31 July 2018 8:27 PM GMT)
கனிமொழி எம்.பி. பெயரில் போலி டுவிட்டர் பக்கம் உருவாக்கியது தொடர்பாக தி.மு.க. தலைமை செயற்குழு உறுப்பினரும், வக்கீலுமான செல்வநாயகம் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் மனு கொடுத்தார். #MPKanimozhi #FakeTwitter
சென்னை:
தி.மு.க. தலைமை செயற்குழு உறுப்பினரும், வக்கீலுமான செல்வநாயகம் நேற்று சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் மனு ஒன்றை கொடுத்தார். அந்த புகார் மனுவில் கூறி இருப்பதாவது:-
தி.மு.க. தலைவர் கருணாநிதி உடல் நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதனால் அவரது மகள் கனிமொழி எம்.பி. மிகுந்த மனவேதனையுடன் உள்ளார். இந்த சூழ்நிலையில் கனிமொழி எம்.பி. தனது டுவிட்டர் பக்கத்தை பயன்படுத்தவில்லை. ஆனால் அவரது டுவிட்டர் பக்கத்தை போலியாக உருவாக்கி, அதில் சில அவதூறான தகவல்களை வெளியிட்டு உள்ளனர். இதுபோன்ற அவதூறு தகவல்கள் அரசியல் காழ்ப்புணர்ச்சியுடன் வெளியிடப்பட்டுள்ளது. இந்து மதத்தை பற்றி அவர் சொல்லாத தவறான தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளது. அவரது நன்மதிப்பை குலைக்கும் வகையில் இது அமைந்துள்ளது. இதுபோன்ற அவதூறு தகவல்களை பரப்புபவர்கள் மீது சட்டபூர்வ நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு புகார் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக சைபர் கிரைம் போலீஸ் விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. #MPKanimozhi #FakeTwitter #tamilnews
தி.மு.க. தலைமை செயற்குழு உறுப்பினரும், வக்கீலுமான செல்வநாயகம் நேற்று சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் மனு ஒன்றை கொடுத்தார். அந்த புகார் மனுவில் கூறி இருப்பதாவது:-
தி.மு.க. தலைவர் கருணாநிதி உடல் நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதனால் அவரது மகள் கனிமொழி எம்.பி. மிகுந்த மனவேதனையுடன் உள்ளார். இந்த சூழ்நிலையில் கனிமொழி எம்.பி. தனது டுவிட்டர் பக்கத்தை பயன்படுத்தவில்லை. ஆனால் அவரது டுவிட்டர் பக்கத்தை போலியாக உருவாக்கி, அதில் சில அவதூறான தகவல்களை வெளியிட்டு உள்ளனர். இதுபோன்ற அவதூறு தகவல்கள் அரசியல் காழ்ப்புணர்ச்சியுடன் வெளியிடப்பட்டுள்ளது. இந்து மதத்தை பற்றி அவர் சொல்லாத தவறான தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளது. அவரது நன்மதிப்பை குலைக்கும் வகையில் இது அமைந்துள்ளது. இதுபோன்ற அவதூறு தகவல்களை பரப்புபவர்கள் மீது சட்டபூர்வ நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு புகார் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக சைபர் கிரைம் போலீஸ் விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. #MPKanimozhi #FakeTwitter #tamilnews
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X