என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
மின்சார ரெயில்களில் படிக்கட்டில் தொங்கியபடி பயணித்தால் மாதாந்திர பயணச்சீட்டு ரத்து
Byமாலை மலர்30 July 2018 11:14 PM GMT (Updated: 30 July 2018 11:14 PM GMT)
மின்சார ரெயில்களில் படிக்கட்டில் தொங்கிக்கொண்டு பயணம் செய்தால் மாதாந்திர பயணச்சீட்டு ரத்து செய்யப்படும் என ரெயில்வே பாதுகாப்பு படை கமிஷனர் எச்சரிக்கை விடுத்துள்ளார். #ElectricTrain #Ticket #MonthlyPass
சென்னை:
கடந்த 24-ந் தேதி காலை மின்சார ரெயிலில் படிக்கட்டு அருகே தொங்கியபடி பயணம் செய்த 5 பேர் பரங்கிமலை ரெயில் நிலையத்தில் இருந்த சுவரில் மோதி பரிதாபமாக இறந்தனர். இந்த விபத்து நடந்த பரங்கிமலை ரெயில் நிலையத்தில் கடந்த 25-ந் தேதி தலைமை ரெயில்வே பாதுகாப்பு கமிஷனர் மனோகரன் ஆய்வு மேற்கொண்டார்.
விபத்து குறித்து நேற்று ரெயில்வே சென்னை கோட்ட மேலாளர் அலுவலகத்தில் ரெயில் பயணிகளிடம் கருத்து கேட்கப்பட்டது. அதில் 12 ரெயில் பயணிகள் தங்கள் கருத்துகளையும், விபத்து குறித்தும் தெரிவித்தனர். 22 ரெயில்வே ஊழியர்களும் தங்களது கருத்துகளை தெரிவித்தனர்.
இதுபோன்ற ரெயில் விபத்துகளை தடுப்பது குறித்து ரெயில்வே பாதுகாப்பு படை கமிஷனர் லூயிஸ் அமுதன் கூறியதாவது:-
ரெயில் படிக்கட்டில் தொங்கியபடி பயணம் செய்வதை தவிர்ப்பது குறித்து பல விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை ரெயில்வே பாதுகாப்பு படை சார்பில் நடத்தியுள்ளோம். படியில் தொங்கியபடி பயணிப்போர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். அவர்களின் மாதாந்திர பயணச்சீட்டு(பாஸ்) பறிமுதல் செய்யப்பட்டு, அதை நிரந்தரமாக ரத்துசெய்ய நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார். #ElectricTrain #Ticket #MonthlyPass
கடந்த 24-ந் தேதி காலை மின்சார ரெயிலில் படிக்கட்டு அருகே தொங்கியபடி பயணம் செய்த 5 பேர் பரங்கிமலை ரெயில் நிலையத்தில் இருந்த சுவரில் மோதி பரிதாபமாக இறந்தனர். இந்த விபத்து நடந்த பரங்கிமலை ரெயில் நிலையத்தில் கடந்த 25-ந் தேதி தலைமை ரெயில்வே பாதுகாப்பு கமிஷனர் மனோகரன் ஆய்வு மேற்கொண்டார்.
விபத்து குறித்து நேற்று ரெயில்வே சென்னை கோட்ட மேலாளர் அலுவலகத்தில் ரெயில் பயணிகளிடம் கருத்து கேட்கப்பட்டது. அதில் 12 ரெயில் பயணிகள் தங்கள் கருத்துகளையும், விபத்து குறித்தும் தெரிவித்தனர். 22 ரெயில்வே ஊழியர்களும் தங்களது கருத்துகளை தெரிவித்தனர்.
இதுபோன்ற ரெயில் விபத்துகளை தடுப்பது குறித்து ரெயில்வே பாதுகாப்பு படை கமிஷனர் லூயிஸ் அமுதன் கூறியதாவது:-
ரெயில் படிக்கட்டில் தொங்கியபடி பயணம் செய்வதை தவிர்ப்பது குறித்து பல விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை ரெயில்வே பாதுகாப்பு படை சார்பில் நடத்தியுள்ளோம். படியில் தொங்கியபடி பயணிப்போர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். அவர்களின் மாதாந்திர பயணச்சீட்டு(பாஸ்) பறிமுதல் செய்யப்பட்டு, அதை நிரந்தரமாக ரத்துசெய்ய நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார். #ElectricTrain #Ticket #MonthlyPass
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X