search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மழைக்காலத்திற்கு முன்பாக கால்வாயில் தூர்வாரும் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும்- அன்வர்ராஜா
    X

    மழைக்காலத்திற்கு முன்பாக கால்வாயில் தூர்வாரும் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும்- அன்வர்ராஜா

    இந்த ஆண்டு மழைக்காலம் தொடங்குவதற்கு முன்பாக, வரத்துக் கால்வாய் புனரமைப்பு பணிகள் ஆகியவற்றை விரைந்து முடிக்க வேண்டும் என்று அன்வர்ராஜா எம்.பி. வலியுறுத்தி உள்ளார்.
    ராமநாதபுரம்:

    ராமநாதபுரம் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் மூலம் 2015-2016-ம் நிதியாண்டு முதல் 2018- 2019 நிதியாண்டு வரை மேற்கொள்ளப்பட்டுள்ள பல்வேறு வளர்ச்சித் திட்டப் பணிகள் குறித்த மாவட்ட ஆளுமை மற்றும் செயற்குழு கூட்டம், குழுவின் தலைவர், அன்வர்ராஜா எம்.பி. தலைமையில் நடந்தது.

    குழுவின் செயலாளரும், கலெக்டருமான நடராஜன் முன்னிலை வகித்தார். 2015-2016-ம் நிதியாண்டு முதல் 2018-2019 (தற்போதைய நிதியாண்டில் இது நாள் வரை) மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் மூலம் செயல்படுத்தப்பட்டு வரும் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித்திட்டம், முதலமைச்சரின் சூரிய ஒளியுடன் கூடிய பசுமை வீடுகள் வழங்கும் திட்டம், இந்திரா நினைவு குடியிருப்புத் திட்டம், தாய் திட்டம், தமிழ்நாடு மாநில ஊரக சாலைகள் மேம்பாட்டு திட்டம், தனிநபர் இல்லக் கழிப்பறைகள் கட்டும் திட்டம், பாராளுமன்ற மற்றும் சட்டமன்ற உறுப்பினர்களின் தொகுதி மேம்பாட்டு நிதி திட்டம் ஆகிய திட்டங்களின் கீழ் பல்வேறு திட்டப் பணிகளுக்கு மேற்கொள்ளப்பட்டுள்ள செலவினங்கள், நிறைவேற்றப்பட்டுள்ள திட்டப் பணிகள், நிலுவையில் உள்ள திட்டப்பணிகள் ஆகியவை குறித்து குழுவின் தலைவர் அன்வர்ராஜா எம்.பி. ஆய்வு செய்தார்.

    இந்த ஆண்டு மழைக்காலம் தொடங்குவதற்கு முன்பாக, மாவட்டத்தில் முன்னேற்றத்தில் உள்ள தடுப்பணை கட்டும் பணிகள், நீர்நிலை சீரமைப்பு பணிகள், வரத்துக் கால்வாய் புனரமைப்பு பணிகள் ஆகியவற்றை விரைந்து முடிக்க வேண்டும் என்றும், காவிரி கூட்டுக்குடிநீர் திட்டத்தின் கீழ் குடிநீர் விநியோகம் மற்றும் ஊரக பகுதிகளுக்கான மின்சார விநியோகம் ஆகியவற்றில் பொதுமக்கள் சிரமப்படாதவாறு கூடுதல் கவனம் செலுத்தி அதிகாரிகள் சிரத்தையோடு பணியாற்ற வேண்டும் என்றும் அறிவுரை வழங்கினார்.

    கூட்டத்தில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் ஹென்சி லீமா அமாலினி, ஊரக வளர்ச்சி முகமையின் செயற்பொறியாளர் சிவராணி, ஊராட்சிகளின் உதவி இயக்குநர் செல்லத்துரை, கலெக்டரின் நேர்முக உதவியாளர்கள் (வேளாண்மை) ராஜா, (நிலம்) அமிர்தலிங்கம், (வளர்ச்சி பிரிவு) உமா மகேஸ்வரி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
    Next Story
    ×