search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    வேலாயுதம்பாளையம் அருகே கழிவுநீர் கால்வாய் சீரமைக்கப்படுமா? - பொது மக்கள் கோரிக்கை
    X

    வேலாயுதம்பாளையம் அருகே கழிவுநீர் கால்வாய் சீரமைக்கப்படுமா? - பொது மக்கள் கோரிக்கை

    வேலாயுதம்பாளையம் அருகே கழிவுநீர் கால்வாய் சீரமைக்கப்படுமா? என பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். #Sewagecanal

    வேலாயுதம்பாளையம்:

    தவுட்டுப்பாளையம் - கரூர் தேசிய நெடுஞ்சாலையில் வேலாயுதம்பாளையம் வள்ளுவர் நகர் பகுதியில் மேம்பாலம் உள்ளது. மேற்கு வள்ளுவர் நகரிலிருந்து வரும் கழிவுநீர் சாக்கடை தண்ணீர் செல்வதற்காக மேம்பாலத்தின் அடியில் குழாய்கள் பதிக்கப்பட்டு தெற்கு வள்ளுவர் நகர் பகுதியில் சிறிது தூரம் மட்டும் சாக்கடை கழிவுநீர் செல்லும் அளவுக்கு குழாய் அமைத்து விட்டு தண்ணீர்வெளியேறும் வகையில் சாக்கடை அமைக்கப்பட வில்லை.

    இதனால் தெற்கு வள்ளுவர் நகர் பகுதியில் சாக்கடை நீர் வெளியேற முடியாமல் சாக்கடை நீர் தேங்கி நிற்கிறது. இந்த சாக்கடை நீரில் பிளாஸ்டிக் டம்ளர்கள், பிளாஸ்டிக் பைகள் உள்ளிட்ட ஏராளமானபிளாஸ் டிக் பொருட்கள் மிதக்கிறது. சாக்கடை நீர் தேங்கிநிற்பதால் தொடர்ந்து துர்நாற்றம் ஏற்படுகிறது. அருகாமையில் குடியிருப்புகளில் உள்ளவர்கள் துர்நாற்றம் தாங்க முடியாமல் அவதியுற்று வருகின்றனர். சாக்கடை நீர் ஏராளமானகொசுக்கள் உற்பத்தியாகி குடியிருப்புகளில் உள்ளவர்களை கடித்து வருகிறது.

    இதனால், மர்ம காய்ச்சல்கள் மற்றும் தொற்றுநோய் ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே மாவட்ட நிர்வாகம் விரைந்து நடவடிக்கை எடுத்து தேங்கி நிற்கும் சாக்கடை நீரை அகற்றி மர்ம காய்ச்சல்கள் மற்றும் தொற்று நோய்கள் வராமல் தடுக்க வேண்டு மென தெற்கு வள்ளுவர் நகர் பகுதியைச் சேர்ந்த பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    Next Story
    ×