search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    திருச்செங்கோட்டில் சட்ட விழிப்புணர்வு முகாம்
    X

    திருச்செங்கோட்டில் சட்ட விழிப்புணர்வு முகாம்

    திருச்செங்கோடு வட்ட சட்ட பணிகள் குழு மற்றும் வழக்கறிஞர்கள் சங்கங்கள் சார்பாக திருச்செங்கோட்டில் சட்ட விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.

    திருச்செங்கோடு:

    திருச்செங்கோடு வட்ட சட்ட பணிகள் குழு மற்றும் வழக்கறிஞர்கள் சங்கங்கள் சார்பாக திருச்செங்கோட்டில் சட்ட விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.

    இந்த முகாமிற்கு திருச்செங்கோடு சார்பு நீதிமன்ற நீதிபதியான பாலகுமார் தலைமை தாங்கி பேசும்போது, குழந்தை திருமணம் நடந்தால் திருமணம் நடத்திய வருக்கும், மணமகன், மணமகள், தாய், தந்தை மீது முதல் தகவல் அறிக்கை தாக்கல் செய்யப்படும் எனவும் மைனர் குழந்தைகள் இருசக்கர வாகனம் ஓட்டி அதனால் விபத்து ஏற்பட்டால் மைனர் குழந்தையின் பெற்றோர் அல்லது பாதுகாவலர் மீது வழக்கு பதியப்படும் எனவும், சாலை விதிகளை மதித்து தலைகவசம் அணிய வேண்டிய அவசியத்தை வலியுறுத்தியும் போக்குவரத்து சட்டங்கள் பற்றியும், சிவில் சட்டங்கள் பற்றியும், பெண்கள் சொத்துரிமை சட்டம் பற்றியும் பேசினார்.

    இதில் வழக்கறிஞர்கள் பரணீதரன், சுப்பிரமணியம், குமரேஸ், சக்திவேல், சங்கீதா, கார்த்திகேயன், பாரத் ஆகியோர் பங்கேற்று பல்வேறு சட்டங்களை பற்றி பேசினார்கள். மேலும் இந்த நிகழ்ச்சியில் குருசாமி, வேலு, ராஜூ என்கிற பழனிசாமி உள்பட பலர் கலந்துகொண்டனர். இதில் பொதுமக்களிடம் மனுக்கள் பெறப்பட்டது. முடிவில் சட்ட பணிக்குழு உதவியாளர் பேபி நன்றி கூறினார்.

    Next Story
    ×