search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    திருச்செங்கோட்டில் துப்புரவு தொழிலாளர்கள் போராட்டம்
    X

    திருச்செங்கோட்டில் துப்புரவு தொழிலாளர்கள் போராட்டம்

    திருச்செங்கோடு நகராட்சி அலுவலகம் முன்பு துப்புரவு தொழிலாளர்கள் போராட்டம் நடத்தினர். #struggle

    திருச்செங்கோடு:

    திருச்செங்கோடு நகராட்சியில் 33 வார்டுகளில் 100 துப்புரவு தொழிலாளர்கள் வேலை பார்த்து வருகிறார்கள். இங்கு துப்புரவு தொழிலாளர்களாக பணிபுரிந்த வாசுதேவன், பாண்டியன், பாலாமணி, மணி ஆகிய 4 பேரையும் கடந்த 27-ந் தேதி பணியிடமாற்றம் செய்ய உத்திரவிட்டனர். அவர்களை பணியிடம் மாற்றம் செய்யகூடாது என்று இன்று காலை திருச்செங்கோடு நகராட்சி அலுவலகம் முன்பு மற்ற தொழிலாளர்கள் போராட்டம் நடத்தினர்.

    இது குறித்து தகவல் அறிந்து நகராட்சி ஆணையாளர் (பொ) சுகுமார் அங்கு வந்து அவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினார். அப்போது அவர்கள் பணியிட மாற்ற ஆணையை ரத்து செய்ய வேண்டும் என்று சுகுமாரிடம் கூறினர். தொடர்ந்து பேச்சு வார்த்தை நடத்தி வருகின்றனர். துப்புரவு பணிக்கு செல்லாததால் தெருக்களில் குப்பைகள் தேங்கி கிடக்கிறது.

    Next Story
    ×