என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
ஆண்டிப்பட்டி அருகே முன்விரோதத்தில் கோஷ்டி மோதல்
ஆண்டிப்பட்டி:
ஆண்டிப்பட்டி அருகே சுந்தர்ராஜபுரத்தை சேர்ந்தவர் ஆனந்தகண்ணன் (வயது26), மறவபட்டியை சேர்ந்வர் அய்யர்சாமி (27) கடந்த சில நாட்களுக்கு முன்பு டாஸ்மாக் கடையில் மது அருந்தும்போது இருவருக்கும் இடையே பிரச்சினை ஏற்பட்டது. இதனால் அடிக்கடி இரு தரப்பினரும் மோதிக்கொண்டனர்.
எனவே முன்விரோதம் தொடர்ந்து வந்தது. சம்பவத்தன்று அய்யர்சாமி மற்றும் அவரது நண்பர்கள் ஆனந்தகண்ணன் மற்றும் அவரது நண்பர்களுடன் தகராறில் ஈடுபட்டனர்.
இது கோஷ்டி மோதலாக மாறியது. இரு தரப்பினரும் பயங்கரமாக மோதிக்கொண்டனர். இதில் படுகாயம் அடைந்த ஆனந்தகண்ணன் தேனி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளார்.
இது குறித்து அவர் அளித்த புகாரின் பேரில் ராஜதானி போலீசார் வழக்குப்பதிவு செய்து அய்யர்சாமி, ஜெயகாந்தன், ஆதி, பசும்பொன் ஆகியோரை கைது செய்தனர்.
இதேபோல் அய்யர்சாமி கொடுத்த புகாரின் பேரில் ஆனந்தகண்ணனின் நண்பர் சதுரகிரி கைது செய்யப்பட்டார். தப்பி ஓடிய பிரகாஷ், சிவக்குமார் ஆகியோரை போலீசார் தேடி வருகின்றனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்